வக்ர சனி: நவம்பர் 4 வரை இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம், பண மழையில் நனைவார்கள்

Shani Vakri 2023, Impact on Zodiac Signs: நீதியின் கடவுள் என அழைக்கப்படும் சனி பகவான் நல்ல பலன்களை அளித்தாலும், தீய பலன்கள் கொண்டு சோதித்தாலும், அந்த பலன்களை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுப்பவர்.

மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஒரு ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளின் மீது சனி பகவானின் தாக்கமும் பொதுவாக மற்ற கிரகங்களை விட அதிகமாக இருக்கும். சனியின் அருள் இருந்தால், அந்த நபருக்கு, அபரிமிதமான செல்வம், செல்வம், பெரிய பதவி, பெயர், மரியாதை ஆகியவை கிடைக்கும். 

 

1 /8

சனி பகவான்: சனியின் கோப பார்வை நம்மை பல வித இன்னல்களில் சிக்க வைக்கின்றது. அவர் நமக்கு துன்பம் கொடுத்தால் அதிலிருந்து மீள்வது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது. அதேபோல், அவரது அருள் பார்வை நம் மீது பட்டால், ஏழையும் அரசனாகலாம். அப்போது நாம் வாழ்வில் அதிகபட்ச முன்னேற்றம் அடைவதை யாராலும் தடுக்க முடியாது. 

2 /8

சனியின் நிலை: தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். அவர் நவம்பர் 4 வரை இந்த நிலையிலேயே இருப்பார். 

3 /8

சனியின் வக்ர இயக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எனினும், சனியின் இந்த இயகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

4 /8

ரிஷபம்: சனியின் வக்ர நிலை சனி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களை கொண்டு வரும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். உங்கள் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படலாம், இது உங்கள் நிதி சிக்கல்களை நீக்கும். 

5 /8

துலாம்: சனி பகவானின் வக்ர நிலை துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும். இவர்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். வாகன சுகம் பெறலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் தற்போது உள்ளது. 

6 /8

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர இயக்கத்தால் பண வரவு அதிகரிக்கும். இது உங்கள் நிதி நிலையை பெரிதும் மேம்படுத்தும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.   

7 /8

சனி பகவானை மகிழ்விக்க: ஏழைகளுக்கு உதவும் நல்ல எண்ணம் கொண்டவர்களை சனி பகவான் சோதிப்பதில்லை. மனிதர்களை பாதிக்கும் ஏழரை சனி, சனி தசை ஆகியவற்றின் தாக்கத்தில் உள்ளவர்கள் அவர் அருளை பெற, கோளறு பதிக, சனி சாலிசா ஆகிய ஸ்தோத்திரங்களை சொல்லலாம். 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.