மாரி செல்வராஜை மூன்றாவது முறையாக நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தை பார்த்த ரஜினி, அவரை நேரில் அழைத்து பாராட்டிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

Rajinikanth On Maamannan: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தை பார்த்த ரஜினி, அவரை நேரில் அழைத்து பாராட்டிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

1 /7

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம், மாமன்னன் 

2 /7

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 

3 /7

படம், நல்ல விமர்சனங்களை பெற்று திரையர்ங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. 

4 /7

மாமன்னன் படத்தை பார்த்த ரஜினி, படத்தையும் மாரி செல்வராஜையும் பாராட்டி ட்வீட் செய்திருந்தார். 

5 /7

இதையடுத்து, மாரி செல்வராஜை தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து அவரை நேரில் பாராட்டியுள்ளார். 

6 /7

இதுகுறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் @rajinikanth.  சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

7 /7

மூன்றாவது முறை ரஜினியிடமிருந்து பாராட்டு வாங்கியதை பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார் மாரி செல்வராஜ். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார். இவை வைரலாகி வருகின்றன.