பலன்களை அள்ளிக் கொடுக்கும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் இன்றே சேரவும்!

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கணக்கில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2013 மார்ச் 31ம் தேதி 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் மட்டும் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

1 /5

இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனா, (APY) என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

2 /5

அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பிறகு, சந்தாதாரருக்கு வாழ்நாள் முழுவதும் ரூ 1000 முதல் ரூ 5000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியம் அரசால் உறுதிப்படுத்தப்படுகிறது. 

3 /5

அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் ரூ.1000 முதல் ரூ.5000 வரை உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு மாதம் ரூ.42 முதல் ரூ.1,454 வரை பங்களிக்க வேண்டும்.

4 /5

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேரலாம்.

5 /5

சந்தாதாரரின் மறைவுக்குப் பிறகு சந்தாதாரரின் மனைவிக்கும் அதே ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும் சந்தாதாரர் மற்றும் மனைவி இருவரும் இறந்த பின், சந்தாதாரரின் 60 வயது வரை சேர்ந்த ஓய்வூதிய நிதி நாமினிக்கு திருப்பித் தரப்படும்.