சீக்கிரமா பணக்காரர் ஆகனுமா? பூஜையறையில இந்த மாற்றங்களை செய்தால் குபேரரின் அருள் உறுதி

astrological remedies: அன்னை லட்சுமியின் அருள் வேண்டும், ஆனால், வருமானம் குறைவாக இருக்கிறதே என்று கவலையாக இருக்கிறதா?  கவலைப்பபட வேண்டாம். 

லக்ஷ்மி தேவி மற்றும் குபேரரை மகிழ்விப்பதற்கான சில சுலப வழிகளை தெரிந்துக் கொள்ளுங்கள். இவற்றை பின்பற்றுவதன் மூலம் விரைவில் பணக்காரர் ஆகலாம்.

1 /10

கடின உழைப்பு இருந்தும் வீட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் நீங்கள் சிரமப்பட்டிருந்தால், ஏமாற்றமடைய வேண்டாம். அதிலிருந்து விடுபட பல அற்புத வழிகள் சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், லட்சுமி தேவி மற்றும் குபேர் தேவ் இருவரின் ஆசீர்வாதமும் கிடைக்கும்

2 /10

அதுமட்டுமல்ல, வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுவதுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். சிறிய மாற்றங்கள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்த முடிந்தால் நல்லது தானே?  

3 /10

அன்னை லட்சுமியின் அருளுடன் குபேரரின் அருளும் சேர்ந்தால் எண்ணியதெல்லாம் ஈடேறும்

4 /10

வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி குபேர ஸ்தோத்திரங்கள் செய்து வணங்கினால், அருளாசி பண ஆசியாக மாறும்

5 /10

சிவப்பு அல்லது மஞ்சள் துணியில் பணம் முடிந்து வைக்கவும், கோவிலுக்கு செல்லும்போது அதை அப்படியே கோவிலில் போடவும்

6 /10

லட்சுமி மற்றும் குபேரின் ஆசீர்வாதங்களைப் பெற விரும்பினால், உங்கள் வீட்டு பூஜையறையில், இந்த இரண்டு தெய்வங்களுடன் கூடிய விநாயகப் பெருமானின் சிலையை நிறுவவும். இத்துடன் காலையிலும் மாலையிலும் இவரைத் தொடர்ந்து வழிபடத் தொடங்குங்கள். உங்கள் நிதி நிலை சில நாட்களில் மேம்படும்.

7 /10

சாஸ்திரங்களின்படி, வீட்டில் மீன் படம் அல்லது சிலை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. நீங்கள் விரும்பினால், வீட்டில் மீன் ஓவியம் வரைந்து வைக்கலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்டுகிறது மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.

8 /10

வீட்டு பூஜையறையில் கலசம் வைத்தால் செல்வம் பெறுகும். ஒரு செம்பில், தண்ணீரை நிரப்பி, வடகிழக்கு மூலையில் வைத்து, அதில் தேங்காய், மாவிலைகள் மற்றும் செப்பு நாணயத்தை வைத்து மூடி வைத்தால், வீட்டின் பொருளாதார நிலை மேம்படும்.  

9 /10

உங்கள் வருமான ஆதாரங்களை அதிகரிக்க, மா லக்ஷ்மி மற்றும் குபேர் தேவ் போன்ற தோற்றத்துடன் 3 நாணயங்களை உங்கள் பெட்டகத்தில் வைக்க வேண்டும். இந்த பரிகாரத்தால் அதிர்ஷ்டம் வர ஆரம்பித்து பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

10 /10

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுநம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டவை, இவற்றை ஜீ மீடியா பரிந்துரைக்கவில்லை