கொளுத்தும் வெயிலில் உடல் குளுகுளுவென இருக்க இந்த சூப்பர் பானம் குடிங்க

Health Benefits Of Fennel Water: பெருஞ்சீரகம் நீர் இயற்கையான பானமாகும், இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெருஞ்சீரகம் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு பல நன்மைகளை பெறலாம். எனவே இந்த கோடை காலத்தில் பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

Benefits of Fennel Water: பெருஞ்சீரகம் விதை நீரில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. கோடையில் இதன் நுகர்வு மிகவும் ஆரோக்கியமானது. இதில் உடல் சூட்டைக் குறைக்கும் தன்மை உள்ளது. இதனால், பெருஞ்சீரகம் தண்ணீர் குடிப்பது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். எனவே கோடை காலத்தில் பெருஞ்சீரகம் விதை நீரை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

1 /8

சுவாச ஆரோக்கியம்: பெருஞ்சீரகம் விதையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசக்குழாய் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும். சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனையில் இருந்து நிவரணம் பெறலாம்.

2 /8

சரும ஆரோக்கியம்: பெருஞ்சீரகம் விதை நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், இவை கொலாஜனை ஊக்குவிக்கிறது, இதனால் சரும ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியமான சருமம் வயதான அறிகுறிகள், முகப்பரு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுப்பட உதவும், மேலும் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும்.

3 /8

எடை மேலாண்மை: பெருஞ்சீரகம் விதை தண்ணீரைக் குடிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். மேலும் இதில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து பசியைக் குறைக்க உதவும். இதனால் உடல் எடையை பராமரிப்பதில் உதவி செய்கிறது.

4 /8

ஹார்மோன் சமநிலை: பெருஞ்சீரகம் விதை தண்ணீர் குடித்து வந்தால், ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும். ஹார்மோன் சமநிலை மாதவிடாய் பிரச்சனைகளைக் குறைக்கவும், இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

5 /8

​இரத்தத்தை சுத்தம்: பெருஞ்சீரகம் விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். இதனால் ந,ம் இரத்தம் சுத்தம் செய்கிறது. நம் உணவில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உடலுக்கு உதவுகிறது.

6 /8

​கண் பார்வை மேம்படும்: பெருஞ்சீரகம் விதை தண்ணீர் குடித்தால் கண்பார்வை மேம்படுத்த உதவும். இந்த விதையில் காணப்படும் வைட்டமின் ஏ கண் பார்வைக்கு நல்லது. கிளைக்கோமாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க பெருஞ்சீரக விதைகள் உதவுகின்றன.

7 /8

புற்றுநோயை தடுக்கும்: பெருஞ்சீரக விதை தண்ணீரில் புற்றுநோயை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. இது புற்றுநோய் நோயாளிகளுக்கு கீமோ நடுநிலையை உண்டாக்குகிறது.  

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.