ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ

7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது. 

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. ஜூலை 2024 -இல் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ/டிஆர் மீண்டும் ஒருமுறை திருத்தப்படும்.

1 /9

ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டு ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் படி பார்த்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்படும் என தெரிகிறது. அப்படி நடந்தால், இப்போது 50% ஆக உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி 54% ஆக உயரும். ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இதற்கான அறிவிப்பு வரலாம். இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் செய்யப்படவில்லை.

2 /9

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. ஜனவரி 2024 -இல் டிஏ (DA) 4% அதிகரிக்கப்பட்டது. இது ஜூன் 2024 வரை பொருந்தும். இப்போது அடுத்த டிஏ திருத்தம் ஜூலை 2024 -இல் செய்யப்படும். இது ஜனவரி முதல் ஜூலை 2024 வரையிலான AICPI குறியீட்டுத் தரவைப் பொறுத்து செய்யப்படும்.

3 /9

ஜனவரியில், குறியீட்டு எண் 138.9 புள்ளிகளாக இருந்தது, இதன் காரணமாக அகவிலைப்படி 50.84 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்குப் பிறகு பிப்ரவரியில் 139.2 புள்ளிகளாகவும், மார்ச் மாதத்தில் 138.9 புள்ளிகளாகவும், ஏப்ரலில் 139.4 புள்ளிகளாகவும் இருந்த குறியீட்டு எண் ஏப்ரலில் 52.43 சதவீதத்தை எட்டியுள்ளதால், ஜூலையில் அகவிலைப்படி 4% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

4 /9

இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான எண்கள் இன்னும் வரவில்லை. ஜூன் மாதத்தில் குறியீடு 0.5 புள்ளிகள் அதிகரித்தாலும், அது 52.91 சதவீதத்தை எட்டும். ஜூலை முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் வந்தாலும், ஜூலை முதலான நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு கிடைக்கும். 

5 /9

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான சூத்திரம் இதுதான்: 7வது ஊதியக்குழு அகவிலைப்படி சதவிகிதம் = [{AICPI-IW (அடிப்படை ஆண்டு 2001=100) -இன் கடந்த 12 மாதங்களின் சராசரி – 261.42}/261.42×100]

6 /9

ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து, மொத்த அகவிலைப்படி 54 சதவீதத்தை எட்டினால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் பெரிய அளவில் உயரும். உதாரணமாக, ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.50000 எனில், டிஏ 4% அதாவது 2000ஆக அதிகரிக்கப்படும், அதாவது ஜூலை மாத சம்பளத்தில் அகவிலைப்படியாக ரூ.2000 உயர்வு கிடைக்கும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரமாக இருந்தால், 54% அகவிலைப்படியின்படி, அவருடைய சம்பளம் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.720 அதிகரிக்கும், ஆண்டுக்கு ரூ.9720 அதிகரிப்பு இருக்கும். 

7 /9

அடிப்படை சம்பளம் ரூ.52 ஆயிரமாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.2080 வீதம் ஆண்டுக்கு ரூ.28080 கிடைக்கும். ரூ.1 லட்சம் அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.4000 வீதம் ஆண்டுக்கு ரூ.54000 பலன் கிடைக்கும். 7 அடிப்படை சம்பளம் ரூ. 60,000 ஆக இருந்தால், 4% DA உயர்வால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.2,400 மற்றும் ஆண்டுக்கு ரூ.28,800 அதிகரிப்பை பெறுவார்கள். ரூ. 70,000 அடிப்படை சம்பளமாக இருந்தால், மாதம் ரூ. 2,800 மற்றும் ஆண்டுக்கு ரூ.33,600 அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் ரூ. 80,000 ஆக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.3,200 மற்றும் ஆண்டுக்கு ரூ.38,400 அதிகமாக கிடைக்கும்.

8 /9

அடிப்படை சம்பளம் ரூ. 90,000 எனில், மாதம் ரூ. 3,600 மற்றும் ஆண்டுக்கு ரூ. 43,200 கிடைக்கும். அடிப்படை சம்பளம் ரூ. 1,00,000 பெறுபவர்களுக்கு மாதம் ரூ.4,000 மற்றும் மொத்த சம்பளத்தில் ரூ.48,000 ஏற்றம் இருக்கும். ரூ. 1,25,000 அடிப்படைச் சம்பளம் உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000, ஒவ்வொரு ஆண்டும் ரூ.60,000 கூடுதலாக பெறுவார்கள். ரூ.1,50,000 அடிப்படைச் சம்பளம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ. 72,000 அதிகம் பெறுவார்கள். ரூ.2,00,000 அடிப்படை ஊதியம் உள்ளவர்கள், ஒவ்வொரு மாதமும் ரூ. 8,000 மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.96,000 உயர்வை பெறுவார்கள். 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.