மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்... எப்போது?

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. பட்ஜெட்டில் அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை என்றாலும், வெறு சில அறிவிப்புகள் மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கக்கூடும். 

7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும் என்று நம்பப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி 4 அல்லது 5 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகின்றது. இதுவரை மே 2024 வரையிலான ஏஐசிபிஐ எண்கள் கிடைத்துள்ளன. ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களும் கிடைத்தவுடன் தான் ஜூலை 2024 முதலான அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.

1 /9

நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளில் உள்ளார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கின்றது. இன்னும் சில நாட்களில் உங்கள் சம்பளத்தில் பெரிய ஏற்றும் ஏற்பட உள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /9

செவ்வாய் (ஜூலை 23) அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வமாக காத்திருந்தார்கள். ஆனால் அதற்கான எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

3 /9

எனினும் அவர்களுக்கு ஆதரவாகவும் தற்பொழுது ஒரு செய்தி வந்துள்ளது. அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த அப்டேட் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4 /9

ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும் என்று நம்பப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி 4 அல்லது 5 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

5 /9

ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகின்றது. இதுவரை மே 2024 வரையிலான ஏஐசிபிஐ எண்கள் கிடைத்துள்ளன. ஜூன் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களும் கிடைத்தவுடன் தான் ஜூலை 2024 முதலான அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.

6 /9

7வது உதியக் குழுவின் படி பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதாவது ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜனவரி மாதம் அகவிலைப்படியும் (Dearness Allowance), ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

7 /9

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) வழங்குகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 50% DA மற்றும் DA -ஐ பெற்று வருகிறார்கள்.   

8 /9

ஜூலை மாதம் முதல் டிஏ 4% உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 54 சதவீதமாக அதிகரிக்கும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பின்னர் ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு இருக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.