மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய திபாவளி பரிசு: அகவிலைப்படி ஏற்றம், டிஏ அரியர், சம்பள உயர்வு

7th Pay Commission:மத்திய அரசு அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு மிக விரைவிக் வரக்கூடும்.

7th Pay Commission:தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி திருத்தம் தீர்மானிக்கப்படுகின்றது. ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத டிஏ உயர்வு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் செய்யப்படுகின்றது. ஜனவரி 2024 முதல் ஜூலை 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் மத்திய அரசு இம்முறை அகவிலைப்படியை 3%-4% சதவீதம் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

1 /11

மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. மத்திய அரசு அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு மிக விரைவிக் வரக்கூடும்.

2 /11

நவராத்திரி அல்லது தீபாவளியை ஒட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு பரிசாக கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்த முறை அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? மத்திய அரசு ஊழியர்களின் மாத ஊதியமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் (Pension) எவ்வளவு அதிகரிக்கும்? இந்த கேள்விகள் அனைவருக்கும் உள்ளன, இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /11

7வது ஊதியக் குழு: இந்த முறை தீபாவளிக்கு முன்னதாகவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது. வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்படுகின்றது.

4 /11

ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் ஜூலை மாத டிஏ உயர்வுக்கான (DA Hike) அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் அறிவிக்கப்படுவது வழக்கம். ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக் அறிவிப்பு இந்த மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 /11

தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி திருத்தம் தீர்மானிக்கப்படுகின்றது. ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத டிஏ உயர்வு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் செய்யப்படுகின்றது.

6 /11

சம்பள உயர்வு: ஜனவரி 2024 முதல் ஜூலை 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் மத்திய அரசு இம்முறை அகவிலைப்படியை 3%-4% சதவீதம் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது. நவராத்திரியில் அல்லது தீபாவளி பண்டிகை நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த பரிசு கிடைக்கலாம். இதன் பின்னர் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 53%-54% ஆக அதிகரிக்கும். அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜூலை முதலான டிஏ அரியர் (DA Arrears) கிடைக்கும்.

7 /11

சம்பள உயர்வு கணக்கீடு: குறைந்தபட்ச சம்பளத்தின் படி, அடிப்படை சம்பளம் 18,000 உள்ள ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் ரூ.540 முதல் ரூ.720 ரூபாய் வரை அதிகரிப்பு இருக்கும். ரூ.30,000 சம்பளம் பெறுபவர்களுக்கு, அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில், அவர்களது டிஏ ரூ.9,000 உயரக்கூடும். டிஏ 3 சதவீதம் அதிகரித்தால் ரூ.9540 உயர்கவும், டிஏ 4% அதிகரிப்பால், மாதமும் ரூ.9720 உயர்வும் இருக்கும். 

8 /11

ஊதிய உயர்வு கணக்கீடு: மாதச் சம்பளம் ரூ.50,000 உள்ள ஊழியர்களுக்கான கணக்கீட்டை காணலாம். அகவிலைப்படி 3% அதிகரித்தால், அவர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தில் ரூ.1,500 கூடுதலாக வரும். ஆண்டுக்கு இந்த உயர்வு ரூ.18,000 ஆக இருக்கும். இந்த தொகை பல்வேறு லெவல் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.  

9 /11

இதற்கு முன்னர் ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50% ஆக உயர்ந்தது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வந்தது.

10 /11

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்தை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. ஆண்டுக்கு இரு முறை இது திருத்தப்படுகின்றது. ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் இது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது. 

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.