செப்டம்பரில் டிஏ ஹைக், மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: முழு கணக்கீடு இதோ

7th Pay Commission: 2024 செப்டம்பரில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றில் அடுத்த அதிகரிப்பு குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7th Pay Commission: சமீபத்தில் ஜூன் 2024 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் டிஏ ஹைக் குறித்த தெளிவு கிடைத்துள்ளது. டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை, CPI-IW 2.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது 138.8 இல் இருந்து 141.4 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, அகவிலைப்படி உயர்வின் சதவீதம் 50.28% இல் இருந்து 53.36% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைபப்டி 3% அதிகரித்தால் ஊழியர்களின் ஊதிய உயர்வு கணக்கீடு எப்படி இருக்கும்? இதை சில உதாரணங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். ஜூலை மாத திருத்தத்திற்குப் பிறகு, 3% டிஏ உயர்வால் அவரது மொத்த சம்பளம் ரூ 540 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும். ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு டிஏ உயர்வு (DA Hike) மூலம் மாத சம்பளம் ரூ.1,707, ஆண்டு சம்பளம் ரூ.20,484 என்ற அளவில் உயரும்.

 

1 /11

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய அப்டேட் உள்ளது. அவர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு விரைவில் வந்துவிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு உயரவுள்ளது? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

2 /11

2024 செப்டம்பரில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றில் அடுத்த அதிகரிப்பு குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்ப்பு ஜூலை 2024 முதல் அமலுக்கு வரும்.

3 /11

மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3% உயர்த்தி வழங்கக்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது, அகவிலைப்படி 50% ஆக உள்ளது. அகவிலைப்படி 3% அதிகரிகப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 53% ஆக அதிகரிக்கும். இது மொத்த ஊதியத்தில் நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும்.

4 /11

இதற்கு முன்னர் ஜனவரி 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் 2024 -இல் அறிவிக்கப்பட்டது. அப்போது அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4% அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 50% ஆக அதிகரித்தன. டிஎ 50% ஐ எட்டிய நிலையில், கடந்த சில மாதங்களில் வீட்டு வாடகைப்படி (HRA) உட்பட பல அலவன்ஸ்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

5 /11

7வது ஊதியக்குழுவின் கீழ், தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி தீர்மானிக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தப்படுகின்றது. ஜனவரி மாத அகவிலைப்படி முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுகின்றது.

6 /11

சமீபத்தில் ஜூன் 2024 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படையில் டிஏ ஹைக் குறித்த தெளிவு கிடைத்துள்ளது. டிசம்பர் 2023 முதல் ஜூன் 2024 வரை, CPI-IW 2.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது 138.8 இல் இருந்து 141.4 ஆக ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, அகவிலைப்படி உயர்வின் சதவீதம் 50.28% இல் இருந்து 53.36% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7 /11

அகவிலைபப்டி 3% அதிகரித்தால் ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு எப்படி இருக்கும்? இதை சில உதாரணங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். ஜூலை மாத திருத்தத்திற்குப் பிறகு, 3% டிஏ உயர்வால் அவரது மொத்த சம்பளம் ரூ 540 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும். ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு டிஏ உயர்வு (DA Hike) மூலம் மாத சம்பளம் ரூ.1,707, ஆண்டு சம்பளம் ரூ.20,484 என்ற அளவில் உயரும்.

8 /11

ஜூலை 2024 -இல் அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால், அனைத்து ஊழியர்களும் மிகப்பெரிய ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். இதற்கான கணக்கீட்டை மேலே பார்த்தோம். இந்த உயர்வு பணவீக்கம் மற்றும் விலைவாசியால் அவதியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இந்த டிஏ உயர்வுக்கு பின்னர், 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் பெறும் ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

9 /11

பணவீக்கத்தின் பாதிப்பை ஈடுகட்டவும், நாளுக்கு நாள் அதிககரிக்கும் விலைவாசியை சமாளிக்கவும் மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை வழங்குகிறது. இது ஆண்டுக்கு 2 முறை திருத்தப்படுகின்றது. தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் தரவுகளின் அடிப்படையில் இந்த திருத்தங்கள் ஏற்படுகின்றன. 

10 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 12 மாதங்களில் AICPI இன் சராசரி (2001 அடிப்படை ஆண்டு = 100)  – 115.76)/115.76] x 100 / பொதுத்துறை ஊழியர்களுக்கு: டிஏ% = [(கடந்த 3 மாதங்களில் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.