மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜூலையில் அகவிலைப்படி உயர்வுடன் ஊதிய உயர்வும் சேர்ந்து சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி 4% முதல் 5% வரை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்படி நடந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /8

நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசும் ஆட்சியமைத்து விட்டது. இந்த நிலையில், சமீபத்தில் இரண்டு மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளன. சிக்கிம் மற்றும் மேற்கு வங்க அரசுகள், தங்கள் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளன. இதன் காரணமாக, இந்த ஊழியர்கள் பணவீக்கத்திலிருந்து பெரும் நிவாரணம் பெறுவார்கள். 

2 /8

மத்திய அரசும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை நற்செய்தியை விரைவில் வழங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஜூலை மாதத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் இந்த மாதத்தில் அரசாங்கம் அகவிலைப்படியுடன் மாத சம்பளத்தை அதிகரிக்கிறது. 

3 /8

7வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் டிஏ உயர்வு (DA Hike) செய்யப்படுகின்றது. பெரும்பாலும், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிப்பு மார்ச் மாதத்திலும், ஜுலை மாதத்திற்கான அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலும் அறிவிக்கப்படுகின்றது. 

4 /8

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி கடந்த ஜனவரி மாதம் 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு அவர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 50% ஆக உயர்ந்துள்ளன. அடுத்ததாக, ஜூலை 2024 -இல், அரசாங்கம் அகவிலைப்படியை 4 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் மேலும் பல கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். இது பணவீக்கத்திலிருந்து ஊழியர்களுக்கு நிச்சயம் பெரும் நிவாரணம் அளிக்கும். 

5 /8

உதாரணமாக, மத்திய அரசு ஜூலை மாதத்தில் அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தினால், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு ஊழியரின் சம்பளம் ஜூலை மாதத்தில் இருந்து 2500 ரூபாய் உயரும். 50 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கும் ஊழியருக்கு 52500 ரூபாய் ஊதியம் கிடைக்கும். அனைத்து ஊழியர்களுக்கும் நல்ல ஊதிய உயர்வு (Salary Hike) கிடைக்கும்.

6 /8

இது தவிர, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் சுமார் 3 சதவீதம் உயர்த்தி வருகிறது. ஜூலை மாதத்தில் மோடி அரசு மாத சம்பளத்தை 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று யூகங்கள் உள்ளன. இதையும் சேர்த்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஜூலை மாதத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். 

7 /8

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வு ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் திருத்தப்படுகின்றது. ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும், ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் வழங்கப்ப்படுகின்றது. 

8 /8

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.