மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்

7th Pay Commission: மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படி இரண்டிலும் பெரிய ஏற்றம் இருக்கும். அதன் கணக்கீடுகளை இங்கே காணலாம். 

7th Pay Commission: அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டையும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதாவது ஆண்டுக்கு இருமுறை உயர்த்துகிறது. ஆகையால் மக்களவைத் தேர்தல்கள் முடிந்தவுடன் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மத்தியில் அமையவுள்ள புதிய அரசு மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

1 /9

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருப்பதுண்டு. குறிப்பாக, ஜூலை மாதத்தில்  பணியாளர்களுக்கு இரட்டிப்பு சலுகைகள் கிடைக்கும். இந்த மாதத்தில், ஊழியர்களின் சம்பளம் மட்டுமல்ல, அகவிலைப்படியும் அதிகரிக்கிறது. இந்த இரண்டு சலுகைகளும் கீழ் நிலையில் உள்ள பணியாளர்கள் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்கும் கிடைக்கும். 

2 /9

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டையும் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு உயர்த்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்களவைத் தேர்தல்கள் முடிந்தவுடன் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மத்தியில் அமையவுள்ள புதிய அரசு மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

3 /9

இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியது. அதன் பிறகு மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாக (50% Dearness Allowance) உயர்த்தப்பட்டது. ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் (AICPI Index) அடிப்படையில், ஜூலை மாதத்திலும் அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தும் என்று ஊகங்கள் உள்ளன. இது நடந்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 54 சதவிகிதமாக (54% Deraness Allowance) அதிகரிக்கும். 

4 /9

ஒரு உதாரணத்தின் மூலம் இதை இதை புரிந்து கொள்ளலாம். ஒரு ஊழியரின் மாதச் சம்பளம் ரூ. 50 ஆயிரம் என்றால், அவருடைய அகவிலைப்படி ரூ.2 ஆயிரமாக இருக்கும். ஜூலை மாதத்தில் டிஏ (DA) மற்றும் சம்பள உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் பல அலவன்ஸ்கள் அதிகரிக்கும். இது பணவீக்கத்தில் இருந்து அவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.

5 /9

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது ஊழியர்களின் சம்பளத்தை 3 சதவீதம் உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளம் ரூ.1500 உயரும். மொத்தத்தில் ரூ. 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வாக (Salary Hike) ரூ.1500 மற்றும் டிஏ உயர்வாக (DA Hike) ரூ.2000 என மொத்தம் ரூ.3500 அதிகரிக்கும். 

6 /9

இதற்கிடையில் புதிய அரசு அமைக்கப்பட்டவுடன் 8வது ஊதியக்குழு அறிமுகம் செய்யப்படுமா என்ற கெள்விகளும் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படுவதால், இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என நிபுணர்கள் கருதுகிறார்க்கள். 

7 /9

அகவிலைப்படி 50 சதவிகிதத்தை தாண்டியவுடன் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. எனினும், இது தொடர்பான எந்த தெளிவான தகவலையும் அரசாங்கம் இன்னும் தெரிவிக்கவில்லை 

8 /9

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR), ஏஐசிபிஐ குறியீடு, அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. DA மற்றும் DR ஐ ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசாங்கம் திருத்துகிறது. சமீபத்தில், மத்திய அரசு DA மற்றும் DR இல் 4% அதிகரிப்பை அறிவித்தது. அதன் பிறகு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50% ஆக உயர்ந்தது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.