டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ

7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

7th Pay Commission: நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) 3-4% இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 53%-54% வரை உயரக்கூடும். 

1 /12

நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய பணிகளில் உள்ளார்களா? அப்படியென்றால், உங்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, 5 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 5 பெரிய பரிசுகளை பெறவுள்ளனர். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /12

மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இது அவர்களின் நிதி நிலை மற்றும் எதிர்கால திட்டங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அறிவிப்புகளில் அகவிலைப்படி உயர்வு, கம்யுடேஷன், டிஏ அரியர் தொகை, எட்டாவது ஊதியக் குழுவின் உருவாக்கம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டணங்களில் தளர்வு ஆகியவை அடங்கும்.

3 /12

நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) 3-4% இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 53%-54% வரை உயரக்கூடும். 

4 /12

இதற்கு முன்னர், ஜனவரி 2024 -க்கான டிஏ உயர்வு 4% ஆக இருந்தது. இதைத் தொடந்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Allowance) 50% ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2024 -இல் வெளிவந்தது. 

5 /12

சம்பள உயர்வு கணக்கீடு: இந்த முறை அகவிலைபப்டி 3% அதிகரித்தால் ஊழியர்களுக்கு நல்ல ஊதிய உயர்வு இருக்கும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். ஜூலை மாத திருத்தத்திற்குப் பிறகு, 3% டிஏ உயர்வால் அவரது மொத்த சம்பளம் ரூ 540 அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு மூலம் ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,480 கூடுதல் வருமானம் கிடைக்கும். ரூ 56,900 அடிப்படை சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு டிஏ உயர்வு (DA Hike) மூலம் மாத சம்பளம் ரூ.1,707, ஆண்டு சம்பளம் ரூ.20,484 என்ற அளவில் உயரும்.

6 /12

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், அக்டோபர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

7 /12

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், அக்டோபர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

8 /12

ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன. தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் திருத்தம் ஏற்படுகின்றது. இதன் மூலம் ஊழியர்களுக்கு பெரிய அளவில் ஊதிய உயர்பு கிடைக்கின்றது. 

9 /12

8வது ஊதியக் குழுவுக்கான அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த நிலையில், ஜனவரி 1, 2026 முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழுவின் பலன்களைப் பெறத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

10 /12

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் வழங்கப்பட்ட 50% தள்ளுபடி கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதைப் பற்றிய நல்ல செய்தி வரக்கூடும் என ஒரு சாரார் கூறி வருகிறார்கள். இதன் மூலம் மூத்த குடிமக்களின் பயணச் செலவில் பெரும் நிவாரணம் கிடைக்கும்.

11 /12

ஓய்வூதியதாரர் ஒருவர் கம்யுடேஷன் முறையை தேர்ந்தெடுத்து பின் இறந்தால், அவரது குடும்பத்தினர் பெறும் ஓய்வூதியத்தில் (Pension) எந்தக் கழிப்பீடும் செய்யப்பட மாட்டாது. உறுப்பினரின் குடும்பத்தின் நிதி பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

12 /12

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.