இந்தியாவில் 5 விநோத காரணங்களுக்காக நடந்த விவாகரத்து வழக்குகள்..!

இந்தியாவில் விநோதமான காரணங்களுக்காக விவாகரத்து பெற்ற வழக்குகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். 

இந்தியாவில், இந்த 5 வினோத காரணங்களால் தம்பதிகள் விவாகரத்து செய்தனர் என்பதை தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

1 /6

இந்தியாவில் திருமணம் ஒரு புனிதமான மற்றும் நிரந்தர பந்தமாகக் கருதப்படுகிறது. ஆனால் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப, திருமணத்தில் அதிகரித்து வரும் பிரச்சனைகள் மற்றும் மோதல்கள் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

2 /6

இருப்பினும், பெரும்பாலான விவாகரத்துகள் பரஸ்பர ஒப்பந்தம், தனிப்பட்ட அல்லது குடும்ப தகராறுகளால் நிகழ்கின்றன என்றாலும், சில விசித்திரமான காரணங்களும் விவாகரத்துக்கு காரணமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அந்தவகையில், இந்தியாவில் 5 விநோதமான காரணங்களுக்காக விவாகரத்து பெற்ற வழக்குகளின் விவரங்களை பார்க்கலாம்.

3 /6

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணமான 40 நாட்களிலேயே கணவரிடம் இருந்து விவாகரத்து கோரிய ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. கணவர் சுத்தமாக இருப்பதில்லை என்றும், உடலில் துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். குடும்ப ஆலோசனை மையத்தில் கணவரிடம் விசாரணை நடத்தியபோது, மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை தான் குளிப்பதாகவும், வாரம் ஒருமுறை கங்கை நீர் தெளிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். இதனால் அந்த பெண் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தபோதிலும், மீண்டும் பேசுமாறு ஆலோசனை மையம் அறிவுறுத்தியுள்ளது.

4 /6

கர்நாடகா மாநிலம் பல்லாரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய அவர் கூறிய காரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம் என்றால் மனைவிக்கு நன்றாக சமைக்கத் தெரியவில்லை என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தினமும் காலை, மதிய உணவு மற்றும் இரவு உணவை அவருக்கு மேகி மட்டுமே சமைத்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த நபர் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

5 /6

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், மனைவிக்கு எதிராக விவாகரத்து கோரி ஒருவர் மனு தாக்கல் செய்தபோது, அதில் அவர் கூறிய விசித்திரமான காரணம் அனைவரும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அந்த விவாகரத்து மனுவில் தனது மனைவி ஒரு சாமியாரின் ஆலோசனையை பின்பற்றுவதாகவும், அவரது ஆலோசனையின் பேரில், பகலில் லட்டு மட்டுமே சாப்பிட வேண்டியிருப்பதாகவும் கணவர் கூறியுள்ளார். கணவனுக்கு தினமும் காலையில் நான்கு லட்டுகளும், மாலையில் நான்கு லட்டுகளும் மட்டுமே கொடுக்கப்பட்டு, வேறு எந்த உணவையும் சாப்பிட மனைவி அனுமதிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த கணவர் அவர்களின் 10 ஆண்டு திருமணத்தை விவாகரத்து மூலம் முடிவுக்கு கொண்டு வந்தார்.

6 /6

இந்த விசித்திரமான விவாகரத்து வழக்கும் உத்தரப்பிரதேசத்தில் தான் நடந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில், உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி ஷரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்குக் காரணம், அவளது கணவர் அவளை மிகவும் நேசித்ததாகவும், அவளுடன் ஒருபோதும் சண்டையிடாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது கணவர் மிகவும் இனிமையாகவும், அன்பாகவும் இருந்ததால், இந்த உறவில் சலிப்பு ஏற்பட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்க மறுத்தாலும், அந்தப் பெண் ஊர் பஞ்சாயத்திலும் முறையிட்டிருக்கிறார்.