விநாயகர் சொல்வதை கேட்டால் கல்யாண வாழ்க்கை கலகலப்பாக இருக்கும்

விநாயகர் கடவுள் பெருமானின் அறிவுரைகளைக் கேட்டால் கல்யாண வாழ்க்கை கலகலப்பாக இருக்கும். 

உங்கள் கல்யாண வாழ்க்கை கலகலப்பாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் விநாயகர் பெருமான் சொல்வதை கேளுங்கள். 

1 /7

எத்தகைய தடையையும் நீக்கும் வல்லமை விநாயகர் பெருமானுக்கு இருப்பதால், உங்கள் கல்யாண மற்றும் காதல் வாழ்க்கையில் இருக்கும் தடைகளையும் அவரால் தீர்த்து வைக்க முடியும். அதற்கு இந்த 5 விஷயங்களை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். 

2 /7

விநாயகர் எப்போதும் மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பவர் என்பதால், மனைவி, காதலி அல்லது பிறர் சொல்லும் எந்த விஷயங்களையும் காது கொடுத்து கேளுங்கள். குறைவாக பேசுங்கள், நிதானமாக எல்லா விஷயங்களையும் எடுத்து பேசுங்கள். அப்போது மற்றவர்களுடனான சிறந்த உறவை உருவாக்க முடியும்.   

3 /7

விநாயகர் அனைவருக்கும் அன்பாகவும் உதவியாகவும் இருக்கும் கடவுள். அவரைப் போலவே நீங்களும் அன்பாகவும், உதவியாகவும் இருக்கவும். காதலிக்கு, மனைவிக்கு மற்றும் பிறருக்கு உதவும் வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும்போது, அவர்கள் நம்மிடம் ஈர்க்கப்பட்டு நம்முடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்கிறார்கள்.    

4 /7

காதலி, மனைவி உள்ளிட்ட யாருடைய குறைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். ஒருவருடைய குறைகளை ஒருவர் ஏற்று மதிக்க வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் சில குறைபாடுகள் உள்ளன. அதனை தெரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது தான் உறவுகள் மகிழ்ச்சியானதாக இருக்கும்.  

5 /7

மற்றவர்களை புரிந்து கொள்வதில் வல்லவர் விநாயகர். மற்றவர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தார்.    

6 /7

 இந்த குணம் உங்கள் உறவுகளில் மிகவும் முக்கியமானது. மற்றவர்களைப் புரிந்துகொள்ள முயலும்போது, அவர்களுடன் நன்றாகப் பழகவும். அப்போது தான்அவர்களுடன் நல்ல உறவை உருவாக்கவும் முடியும்.  

7 /7

விநாயகர் பெருமான் தலைகணம் இல்லாதவர். அவர் எப்போதும் மற்றவர்களுக்காக தன்னைக் குறைத்துக் கொள்ள தயங்கியதில்லை. இந்த குணம் உங்கள் உறவுகளில் மிகவும் முக்கியமானது. நாம் நமது ஈகோவை விட்டுவிட்டால், மற்றவர்களுடன் சிறந்த உறவை உருவாக்கி அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.