10 ரூபாய் நாணயம், 100 ரூபாய் நோட்டு செல்லுமா? செல்லாத? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!


10 Rupee Coin Valid or Not: ₹10 நாணயம் செல்லுமா செல்லாத.. எந்த நாணயம் உண்மையானது? போலி ₹10 நாணயம் புழக்கத்தில் இருக்கிறதா? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது.. வாருங்கள் பார்ப்போம்.

RBI Warning Rs 100 Notes, Rs 10 Coins: ₹10 நாணயம் குறித்த சந்தேகங்களும் குழப்பங்களும் இந்தியாவில் தற்போது அதிகரித்து விட்டன. பொதுமக்களில் அநேகர் குறிப்பாக கடைக்காரர்கள் மற்றும் வணிக ரீதியாக பல்வேறு பகுதிகளில் நாணயத்தை ஏற்க மறுக்கின்றனர். இந்த குழப்பத்தால் ₹10 நாணயம் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

1 /9

₹10 நாணயம் செல்லுமா செல்லாத.. எந்த நாணயம் உண்மையானது? வாருங்கள் பார்ப்போம்.

2 /9

இந்தியாவில் ₹10 நாணயம் பல்வேறு வடிவமைப்புகளில் புழக்கத்தில் உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ₹10 நாணயத்தில் 14 வெவ்வேறு வடிவமைப்புகள் உள்ளன. 

3 /9

இவற்றில் 10 வரி வடிவமைப்பு கொண்ட நாணயங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், அதே சமயம் 15 வரி வடிவமைப்பு கொண்டவை போலியானவை என்றும் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதன் காரணமாக ₹10 ரூபாய் நாணயங்களை மக்கள் ஏற்க தயங்குகின்றனர்.   

4 /9

சில குறியீட்டை கொண்ட நாணயங்கள் மட்டுமே உண்மையானவை என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் நாணயத்தின் வடிவமைப்பு உண்மையானதாக இருக்க 10 வரிகளை கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்

5 /9

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ள எல்லா ₹10 நாணயங்களும் இந்திய அரசின் அதிகாரத்தின் கீழ் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. 14 வகைகளில் எந்த வடிவமைப்பை கொண்டிருந்தாலும் அனைத்து நாணயங்கள் ஒரே மதிப்பை கொண்டுள்ளன

6 /9

ஒவ்வொரு வடிவமைப்பிலும் அனைத்து ₹10 நாணயங்களும் சட்டபூர்வமானவை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது.

7 /9

இதனால் நாணயத்தை ஏற்க மறுப்பது பொருத்தமற்றது மட்டுமல்லாமல், அது சட்ட விரோதமானது என்பதும் உறுதி செய்யப்படுகிறது

8 /9

இந்த நாணயங்களை பரிவர்த்தனைகளுக்கு ஏற்க மறுக்கும் தனி நபர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது. 

9 /9

ஆனால் ₹100 நோட்டு செல்லுமா என்பது குறித்து ஆர்பிஐ விளக்கம் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை ₹10 நாணயங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 1440 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி பொதுமக்களை அறிவுறுத்தி இருக்கிறது.