பூஜாவுக்கு விடுதலை! சாட்சி வீடியோ பிராங்க் என நீதிமன்றம் தீர்ப்பு! மீனாட்சி பொண்ணுங்க நிம்மதி

Meenakshi Ponnunga Latest Update: கடைசி நொடியில் என்ட்ரி கொடுத்த ரோகித்.. பூஜா வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 12, 2023, 11:56 AM IST
  • கடைசி நொடியில் என்ட்ரி கொடுத்த ரோகித்
  • பூஜா வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு
  • மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்
பூஜாவுக்கு விடுதலை! சாட்சி வீடியோ பிராங்க் என நீதிமன்றம் தீர்ப்பு! மீனாட்சி பொண்ணுங்க நிம்மதி title=

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபலமான தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கருவாகும்.

தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்‌ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலாக மீனாட்சி பொண்ணுங்க இருக்கிறது. 

மேலும் படிக்க | ‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதுவரை நடந்தது என்ன..?

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மீனாட்சி வீட்டில் ரோகித்தை சங்கிலி பார்த்து விடுகிறான். இதற்கு முன்னதாக, தொடர் கடந்த சில எபிசோடுகளாக பல விருவிருப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வரும் முக்கிய கதாப்பாத்திரமான ரோஹித் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக காண்பிக்கப்பட்டிருந்தது.

மீனாட்சி வீட்டில் ரோஹித் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. தன்னுடைய மனைவியே தன்னை கொலை செய்ய முயற்சி செய்த விஷயத்தை சொல்லி சொல்லி அவன் கலங்கி அழ மீனாட்சி அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

இன்றைய எபிசோட் அப்டேட்!

மீனாட்சி வீட்டில் ரோகித்தை சங்கிலி பார்த்து விடுகிறான். பிறகு மீனாட்சி வீட்டிற்கு புஷ்பாவும் சங்கிலியும் வந்து சந்தேகப்பட்டு ரோகித்தை தேட ரோகித் இறந்து விட்டான் என்று துர்கா சத்தம் போட. புஷ்பாவும் சங்கிலியும், அங்கிருந்து கிளம்பி செல்கின்றனர்

மேலும் படிக்க | ‘மறக்குமா நெஞ்சம்’ விவகாரம்: டிக்கெட் பணம் திருப்பி தரப்படுமா..? ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்..!

புஷ்பா ஜெயிலில் பூஜாவை சந்தித்து ரோகித் உயிருடன் இருக்கிறான். மீனாட்சி வீட்டை கண்காணிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போகிறாள்.  அதன் பிறகு கோர்ட்டில் விவாதம் நடந்து பூஜாவுக்கு தண்டனை கொடுக்கப்படும் நேரத்தில் ரோகித் வந்து விடுகிறான், பூஜா என்னை கொல்லவில்லை சாட்சியாக கருதப்படும் இந்த வீடியோ பிராங்க் வீடியோ என்று சொல்லிவிட தண்டனையிலிருந்து பூஜா விடுவிக்கப்படுகிறாள்.

காணத்தவறாதீர்கள்..!

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொடரை தினமும் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்க | உயிருடன் வந்த ரோஹித்..பூஜாவுக்கு சிறை தண்டனை - மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News