மாரி சீரியல் இன்றைய எபிசோட்: தாரா போடும் கணக்கு.. ரவுடிகளை ஓடவிட்ட முத்து பேச்சி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் மாரி சீரியலில், இன்றைய (ஏப். 5) எபிசோட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : May 5, 2023, 04:01 PM IST
  • மாரி சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும்.
  • இன்றைய எபிசோடில் முத்து பேச்சி ஊருக்கு புறப்படுகிறார்.
  • அவரை தாக்க ஒரு ரவுடி கும்பல் காத்துக்கொண்டிருக்கிறது.
மாரி சீரியல் இன்றைய எபிசோட்: தாரா போடும் கணக்கு.. ரவுடிகளை ஓடவிட்ட முத்து பேச்சி! title=

Zee Tamil Maari Serial Today Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் மாரி சீரியலில், இன்றைய (ஏப். 5) எபிசோட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Zee Tamil Maari Serial Today Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துப்பேச்சி சாமியை கும்பிட்டு விட்டு வெளியே வரும்போது அவருக்காக காத்திருக்கும் எம்எல்ஏ அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, 'காலில் விழும் கலாச்சாரத்தை முதலில் விடுங்கள், மக்களுக்காக நல்லது செய்யுங்க அதுவே போதும்' என கூறுகிறார். 

ஊர் மக்கள் எல்லோரும் பேச்சியம்மன் கோவிலை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்க முத்துபேச்சி கண்டிப்பாக அதற்காக நான் கலெக்டரிடம் பேசுகிறேன் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இந்த பக்கம் ஜாஸ்மின், ஸ்ரீஜா மற்றும் சங்கர பாண்டி ஆகியோர் மாரி ஊருக்கு போகும் விஷயத்தை தாராவுக்கு சொன்னால் அவர் சூர்யாவை தடுத்து நிறுத்தி விடுவார் என திட்டமிட்டு தாராவுக்கு போன் போடுகின்றனர். 

மாரி உயிருக்கு ஆபத்து

போனை எடுத்த தாரா, 'மாரி ஊருக்கு போகும் விஷயம் தானே சூர்யாவை போக சொல்லுங்க' என சொல்ல மூவரும் குழப்பம் அடைகின்றனர். 'மாரி உயிருக்கு ஆபத்து, அவ ஊருக்கு போனா திரும்பி வரமாட்டா, நமக்கும் ஒரு தொல்லை குறையும்' என சொல்லி ஃபோனை வைக்கிறாள். ‌

இங்கே ஊர் மக்கள் நீலகண்டன் வீட்டுக்குச் சென்று ஒருவர், சூர்யா பணக்கார வீட்டை சேர்ந்தவர் என்பதால் ஏசி இல்லாமல் இருக்க மாட்டார் என ஏசி வாங்கி வந்து கொடுக்கிறார். இன்னொருவர் கோவில் திருவிழா முடியும் வரை அவங்களுக்கு தேவையான விருந்து என்னுடைய வீட்டில் இருந்து தான் வரும் என சொல்கிறார். இன்னொருத்தர் மாரி சூர்யா குடும்பத்துக்காக முழு ஆட்டையே ஒருவர் கொடுத்திருக்கிறார் என சொல்ல இதையெல்லாம் கேட்டு நீலகண்டன் அனைத்தும் சமயபுரத்து மாரியம்மனால் மாரிக்கு கிடைத்த பெருமை என மகிழ்ச்சியடைகிறார். 

Zee Tamil Serial

மேலும் படிக்க | சீதாவுக்கு செக் வைக்க மகா செய்யும் சூழ்ச்சி! சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்!

வெளுத்து வாங்கும் முத்து பேச்சி

அதற்கு அடுத்ததாக சூர்யா, மாரி, துர்கா மற்றும் ஹாசினி என நால்வரும் ஊருக்கு கிளம்ப தாரா போன் செய்து ஊருக்கு கிளம்பிட்டாங்களா என கேட்கிறார். இங்கே முத்து பேச்சிக்காக ஊர் மக்கள், கலெக்டர், கோவில் நிலத்துக்கு சொந்தக்காரர் சர்க்கரை இது எல்லோரும் காத்துக் கொண்டிருக்க முத்துப்பேச்சி காரில் மாஸாக வந்து கொண்டிருக்கிறார். 

சக்கரை யார் அந்த முத்துப்பேச்சி அவளுக்காக எதுக்கு காத்திருக்க வேண்டும் என கோபப்படுகிறார். மேலும் தன்னுடைய அடியாட்களை கூப்பிட்டு கேட்க அந்த முத்துப்பேச்சி இங்க வந்து சேர மாட்டா, அவளை தீர்த்துக்கட்ட ஆல்ரெடி ஆட்களை தயார் செய்தாச்சு என கூறுகிறார். 

மறுபக்கம் முத்துப்பேச்சி வந்து கொண்டிருக்கும் போது வழியில் அவரது ஜீப்பை மறிக்கும் ரவுடிகள் உங்கள பரலோகத்துக்கு அனுப்பப் போவதாக சொல்ல முத்துப்பேச்சி சண்முகம் என குரல் கொடுக்க அவர் சிலம்பக் கம்பை தூக்கி வீசுகிறார். அதை கையில் பிடிக்கும் முத்து பேச்சி பத்து வயதில் இருந்து சிலம்பம் கற்றுக் கொண்டு தேசிய அளவில் பல போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்பதால் அவர்களுடன் சண்டை போட்டு அடி வெளுத்து ஓடவிடுகிறார். 

அடுத்தது என்ன?

அதனைத் தொடர்ந்து, பஞ்சாயத்துக்கு வரும் முத்துபேச்சி சக்கரையிடம் நேரடியாக நான் விஷயத்துக்கு வருகிறேன். இந்த கோவிலை திறந்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என சொல்ல அது எனக்கு சொந்தமான நிலம், என்னால் கோவிலுக்காக விட்டுக் கொடுக்க முடியாது என சொல்கிறார். 

ஆதலால் முத்துபேச்சி கோவில் திறந்து கும்பாபிஷேகம் ஆனதும் முதல் மரியாதையை உங்களுக்கே தருகிறோம் என சொல்ல அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சோனா விலகல்

மாரி சீரியலில் தாரா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சோனா தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள சோனா, இது போன்ற நல்ல கதாபாத்திரத்தை கொடுத்த மாரி சீரியல் குழுவினருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்! ராஜ ஸ்ரீ கையில் சிக்கிய வீடியோ.. கதிருக்கு தீபா கொடுத்த அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News