“பொய் ரொம்ப நாளைக்கு நிலைக்காது..” சிவகார்த்திகேயன் பேட்டி!

Sivakarthikeyan: பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டி.இமானுக்குமான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Oct 23, 2023, 02:32 PM IST
  • சிவகார்த்திகேயன்-டி.இமான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
  • சிவகார்த்திகேயன் வதந்திகள் குறித்து பேசியுள்ளார்.
  • இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“பொய் ரொம்ப நாளைக்கு நிலைக்காது..” சிவகார்த்திகேயன் பேட்டி! title=

தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான டி.இமான், சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், தனக்கு சிவகார்த்திகேயன் துரோகம் செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். 

டி.இமான்-சிவகார்த்திகேயன் பிரச்சனை:

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராக இருந்தார். மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை என சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து சில ஆண்டுகள் ஒன்றாகவே பணிபுரிந்தார். இதைத்தாண்டி, இமானும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய குடும்ப நண்பர்களாகவும் இருந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு இமான், தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்தார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இமான், கடந்த 2022ஆம் ஆண்டு அமீலியா என்பவரை கரம் பிடித்தார். 

இமான், சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், “சிவவகார்த்திகேயனுடன் இனி ஏதாவது படத்தில் இணைந்து பணிபுரிவீர்களா” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இந்த ஜென்மத்தில் இனி அவருடன் சேர்ந்து பணிபுரிய மாட்டேன். அவர் எனக்கு ஒரு பெரிய துரோகத்தை செய்து விட்டார்..” என்று கூறியுள்ளார். அது என்ன துரோகம் என்று வெளியில் கூற முடியாது என்றும் இமான் கூறினார். இமானின் இந்த பேட்டி தற்போது வரை தீயாய் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. 

அப்படியென்ன துரோகம்?

இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக குறிப்பிட்டாரே அன்றி என்ன துரோகம் என்று குறிப்பிடவில்லை. இதையடுத்து பலர், இமானின் முன்னாள் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இருந்ததாகவும் அதனால்தான் அவர்களுக்குள் விவாகரத்து நடந்ததாகவும் கூறி வந்தனர். இதையடுத்து, இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார். அதில், சிவகார்த்திகேயனை ‘ஜென்டில்மேன்’ என்று குறிப்பிட்ட அவர், இமானிற்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சனையை சமாதானம் செய்து வைக்கத்தான் அவர் முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டார். இவையெல்லாம் நடந்த பிறகும் கூட, இன்னும் சிவகார்த்திகேயன் குறித்த விவகாரம் முடிந்ததாக தெரியவில்லை. அவர், இது குறித்து பேசுவார் என்றும், தன் மீது எந்த தவறும் இல்லை என்று கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இன்றளவும் நடக்கவில்லை. 

மேலும் படிக்க | டி.இமான் விவாகரத்துக்கு SK தான் காரணமா...? முழு பின்னணி என்ன?

வதந்திகள் குறித்து சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த போது ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், “உங்களை பற்றி பொய் தகவல்கள் பரவும் போது எப்படி எடுத்துக்கொள்வீர்கள்..?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் கூறியுள்ள விஷயம் மாற்றி வந்துள்ளது என்றால் அதை நான் மறுக்கலாம். ஆனால், அது முழுமையாக பொய்யாக இருக்கும் போது நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்..?” என்று பேசியுள்ளார். மேலும், பொய் என்று தெரிந்த ஒரு விஷயம் அதை எத்தனை பேர் பேசினாலும் நிலைக்காது என்று கூறியுள்ள சிவா, ஒரு சிலர் அதை நம்பினாலும் அதுதான் உண்மை என்றெல்லாம் நிரூபிக்க முடியாது என்று கூறியுள்ளார். 

டி.இமானின் விவகாரம் தீயாய் பரவி வரும் இந்த நேரத்தில், சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் பேசியுள்ள இந்த விஷயம், தற்போது வீடியோ வடிவில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | டி.இமான் பிரச்சனையால் பட வாய்ப்புகளை இழக்கும் சிவகார்த்திகேயன்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News