கீழே விழுந்து உடைந்த அம்மாவின் போட்டோ.. கலங்கிய சண்முகம் - அண்ணா சீரியல்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் அம்மா சூடாமணி வைகுண்டம் கனவில் தோன்றிய நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2023, 12:35 PM IST
கீழே விழுந்து உடைந்த அம்மாவின் போட்டோ.. கலங்கிய சண்முகம் - அண்ணா சீரியல்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தின் அம்மா சூடாமணி வைகுண்டம் கனவில் தோன்றிய நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சூடாமணியை பார்த்த வைகுண்டம் அலறி எழுந்து வீடு முழுக்க தேட எல்லோரும் என்னாச்சு என்று கேட்கின்றனர். உங்கம்மா என்னை கூப்பிட்ட மாதிரி இருந்தது என்று சொல்ல சண்முகம் 20 வருஷமா கூப்பிடாதவங்க இப்ப வந்து கூப்பிட போறாங்களா ஏதாச்சு கனவு கண்டிருப்பீங்க போய் படுங்கப்பா என்று சொல்கிறான். 

உடனே வைகுண்டம் இன்னைக்கு என்ன நாள் என்ன மாசம் என்ன திதி என்பதையெல்லாம் விசாரித்து பார்க்கையில் கடைசியில் அது அவரது கல்யாண நாள் என தெரிய வருகிறது. கல்யாண நாள் ஞாபகப்படுத்த தான் சூடாமணி கனவில் வந்ததாக இவர் சொல்ல சண்முகம் கல்யாண நாள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டே படுத்திருப்பீங்க அதான் அம்மா கனவில் வந்திருக்காங்க என்று சொல்ல எனக்கு கல்யாண நாள் என்பதே இப்பதான் தெரியும், அப்படி இருக்கும்போது எப்படி நினைத்துக்கொண்டே படுத்திருப்பேன் என்று வைகுண்டம் சொல்லி ஃபீல் செய்கிறார். 

சண்முகம் அம்மாவாக நினைக்கும் வேப்பமரத்தின் அருகே வந்து மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு தன்னுடைய அம்மாவின் நினைவுகளை நினைத்து பார்த்து எப்படியாவது என்னுடைய அம்மாவை கண்ணில் காட்டிடு முருகா என வேண்டி விட்டு அங்கிருந்து நகர கழுத்தில் இருந்த முருகர் டாலர் மரத்தில் மாட்டி அறுந்து தொங்குகிறது. 

இதை அறியாத சண்முகம் அங்கிருந்து நகர்ந்து வந்த பிறகு கழுத்தில் டாலர் இல்லாததை பார்த்து முருகனை காணோம் என்று பதற தங்கைகள் எல்லோரும் திருடனா என்று அலறி வருகின்றனர். வைகுண்டம் கையில் கட்டை எடுத்துக் கொண்டு எங்க பாம்பு எங்க பாம்பு என்று ஓடி வர நான் என் கழுத்தில் இருந்த முருகனை காணோம்னு சொன்னேன் என்று சண்முகம் சொல்ல தங்கைகள் வீட்டு பரண் மேல நிறைய வாங்கி வச்சிருக்கேன் வேற ஏதாவது எடுத்து மாட்டு என்று சொல்லி உள்ளே செல்கின்றனர். பிறகு பரணியும் சண்முகம் வீட்டிற்கு வருகிறாள். 

அதை தொடர்ந்து சண்முகம் வேறொரு டாலரை தேடுவதற்காக பரண் மேலே கை வைத்து தேட அங்கிருந்து ஒரு போட்டோ கீழே விழுந்து உடைகிறது. அது அம்மாவின் போட்டோ எனத் தெரிந்து சண்முகம் கலங்கி நிற்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா’ சீரியல். 

அண்ணா சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | 'ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன்​

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News