தெய்வ சக்தி உடைய குழந்தையை பெற்றெடுப்பாளா மாரி? சித்தர்கள் சொல்வது என்ன?

Maari Serial Episode Update: மாரிக்கு போட்டியாக கர்ப்பம்.. ஸ்ரீஜா போடும் டிராமா, நடக்க போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 2, 2023, 01:05 PM IST
  • மாரிக்கு போட்டியாக கர்ப்பம்
  • ஸ்ரீஜா போடும் டிராமா
  • மாரி சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்
தெய்வ சக்தி உடைய குழந்தையை பெற்றெடுப்பாளா மாரி? சித்தர்கள் சொல்வது என்ன? title=

மாரி சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மாரி’ சீரியல்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், எங்கப்பா எங்கே என்று ஜெகதீஷ் கேட்க, ஹாசினி எல்லாவற்றையும் உளறிவிடுகிறாள். நீ அவ்வளவு நல்லவள் கிடையாது, சீக்கிரம் மனசு மாறமாட்டியே என்று சந்தேகப்படுகிறார் ஜெகதீஷ். உடனே தாரா அந்த பாயாசத்தை குடித்து அதில் எதுவும் கலக்கவில்லை என்பதை நிரூபிக்க பாயாசத்தை குடிக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

ஸ்ரீஜா மயக்கம் போட்டு கீழே விழுந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ஸ்ரீஜா மயக்கம் போட்டு விழுந்ததும் அனைவரும் பதற்றமாகி டாக்டரை கூப்பிட்டு பரிசோதிக்கின்றனர்.

மேலும் படிக்க | லியோ-2 படம் தயாராகுமா? லோகேஷ் கனகராஜ் கூறிய பதில் இதுதான்!

ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் சொன்னதும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. தனக்கு ஒரு வாரிசு வரப் போவதை என நினைத்து தாரா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள். அதனை தொடர்ந்து ஸ்ரீஜா டாக்டர் கிளம்பியதும் பின்னாடியே வர டாக்டர் இது நிஜ கர்ப்பம் இல்லனு சீக்கிரம் எல்லாரிடமும் சொல்லிடு, அதான் உனக்கு நல்லது என்று சொல்ல, ஸ்ரீஜா மாரிக்கு போட்டியாக கர்ப்பமாக இருப்பது போல் நடிப்பது தெரிய வருகிறது. 

maari serial update

இதன் தொடர்ச்சியாக மாரியும் சூரியாவும் ஹாஸ்பிடலுக்கு வந்து ஸ்கேன் செய்து பார்க்க சூர்யா குழந்தை தெரியுது என சந்தோசப்பட நர்ஸ் அதுக்குள்ள குழந்தையெல்லாம் தெரியாது என சூர்யாவை கலாய்க்கிறார். பிறகு தாராவும் ஸ்ரீஜாவும் இதே ஹாஸ்பிடலுக்கு வர மாரிக்கு ஸ்ரீஜா கர்ப்பம் என்ற விஷயம் தெரிய வர அவளும் சந்தோஷமடைகிறாள். 

மேலும் படிக்க | அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

அடுத்து சூரியாவும் மாரியும் வழக்கமாக சந்திக்கும் சித்தரை வந்து பார்க்க அங்கு வந்திருக்கும் மூன்று சித்தர்கள் மாரி தெய்வ சக்தி உடைய குழந்தையை பெற்றெடுக்க போகிறார். நாங்களும் இந்த குழந்தைக்காக தான் காத்துட்டு இருந்தோம் என்று சொல்லி அவள் காலில் விழுந்து மரியாதை செய்கின்றனர். 

இங்கே ஹாஸ்பிடலில் ஸ்ரீஜா டாக்டருக்கு பணத்தை கொடுத்து தன் பக்கம் இழுத்து கர்ப்பமாக இருப்பது போலவே பொய்யான ரிப்போர்ட்டை ஏற்பாடு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ஷண்முகம் எடுத்த அதிரடி முடிவால் முத்துபாண்டிக்கு புல்ஸ்டாப்? அண்ணா சீரியல் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News