ஷண்முகத்தை கைது செய்ய கிளம்பும் முத்துப்பாண்டி.. நடக்க போவது என்ன? அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

Zee Tamil Anna Serial August 7th Episode Update:  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை இதில் காணலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 9, 2023, 12:08 PM IST
  • தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
  • அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
  • இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஷண்முகத்தை கைது செய்ய கிளம்பும் முத்துப்பாண்டி.. நடக்க போவது என்ன? அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஷண்முகம் முத்துபாண்டியை அடித்து தலையில் குண்டானை மாட்டி விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ரத்னா முத்துப்பாண்டி உடம்பில் இருக்கும் மண்ணை அழுத்தி அழுத்தி வெளியே எடுக்க வலியில் துடித்து கொண்டிருக்க பிளம்பர் வீட்டிற்கு வருகிறார், அவரும் குண்டானை கழட்ட முயற்சி செய்த முடியாத காரணத்தில் அறுத்து தான் எடுக்க வேண்டும் என்று சொல்லி குண்டானை அறுத்து எடுக்கிறார். 

இதனையடுத்து முத்துப்பாண்டி கோபத்தில் அந்த சண்முகத்தை சும்மா விட மாட்டேன் என்று கத்த வாங்குனது போதாதா? இதை இப்படியே விட்டுட்டு அடுத்த வேலையை பாருங்க என்று பாக்கியம் சொல்ல முத்துப்பாண்டி அப்படியே எல்லாம் விட முடியாது என்று சொல்கிறான். 

அடுத்து ஷண்முகம் சௌந்தரபாண்டிக்கு போன் செய்து உன் புள்ள ஆள் இல்லாத நேரம் பாத்து வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறி நடந்துக்கிட்டான், அதான் அடிச்சி தலையில் குண்டானோட அனுப்பி வச்சிருக்கேன், திரும்பவும் ஏதாவது பண்ணா அடுத்த முறை தலை இல்லாமல் தான் அனுப்புவேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறான். 

இதனால் உச்சகட்ட கோபமடையும் சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் உன்கிட்ட பதவியும் இருக்கு பணமும் இருக்கு, போலீஸ் என்ற அதிகாரமும் இருக்கு அந்த சண்முகத்தை கைது பண்ணி FIR போட்டு கைய காலை உடை, எவன் கேட்க போறான் என்று சொல்ல அவனும் நல்ல ஐடியா என்று அப்படியே செய்ய முடிவெடுக்கிறான். 

பிறகு பரணி அம்மா பாக்கியமிடம் உனக்கு உன் அண்ணன் குடும்பத்தோட சம்மந்தம் வச்சுக்கணும்னு ஆசையே இல்லையா என்று கேட்க அவள் இருந்தது ஆனால் இப்போ இல்ல.. ரத்னா நல்ல பொண்ணு இவன் கையில் மாட்டி சின்னாபின்னமாக கூடாது என்று சொல்கிறாள். மேலும் இவன் இல்லனாலும் என அண்ணன் குடும்பத்தோட சம்மந்தம் அமையும் என்று சொல்ல பரணி எப்படி என்று கேட்க அதான் சிவபாலன் இசக்கி பின்னாடியே சுத்திகிட்டு இருக்கானே.. இசக்கி அப்படியே என் அம்மா மாதிரி பொறுப்பான பொண்ணு அவ மூலமாக என் அண்ணன் குடும்பத்துல சம்மந்தம் வச்சிப்பேன் என்று சொல்கிறாள். 

மறுநாள் முத்துப்பாண்டி ஆவேசமாக போலீஸ் ஸ்டேஷன் கிளம்ப பரணி நீ இப்படியெல்லாம் செய்தா ரத்னா எப்படி உன்னை கட்டிப்பா? என்று கேள்வி அவ விருப்பத்துக்காக நான் கல்யாணம் பண்ணல, என்னுடைய விருப்பத்துக்காக கல்யாணம் பண்றேன்.. எனக்கு பிடித்ததை நான் செஞ்சிட்டு போயிட்டே இருப்பேன், இன்னும் 1 மணி நேரத்துல அவன் கைதாகிட்டான்னு உனக்கு தகவல் வரும்பா என்று சொல்லி கிளம்புகிறான்.

இதனால் பரணியும் பாக்கியமும் அதிர்ச்சி அடைகிறார்கள், மேலும் பரணி சண்முகத்துக்கு போன் செய்ய வண்டியில் சென்று கொண்டிருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

மேலும் படிக்க | 'ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன்​

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News