'விக்ரம்' படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் படங்கள்!

இந்த ஆண்டு வெளியான 'விக்ரம்' படம் அதிக வசூல் சாதனை படைத்து வெற்றிபெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 12, 2022, 01:09 PM IST
  • விக்ரம் படம் தமிழகத்தில் வசூல் சாதனை செய்து வருகிறது.
  • மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
  • அடுத்தடுத்து தமிழில் பெரிய படங்கள் வர உள்ளன.
'விக்ரம்' படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் படங்கள்! title=

ஜூன்-3ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரது சிறந்த நடிப்பில் வெளியான 'விக்ரம்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  இந்த ஆண்டு வெளியான சில பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களுக்கு திருப்தியளிக்காத நிலையில், 'விக்ரம்' படம் அனைவரையும் மகிழ்விக்க செய்துள்ளது.  இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கும் படங்கள் குறித்து பார்ப்போம்.  

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான 'கோப்ரா' ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று.  7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் எஸ்.எஸ்.லலித் குமார் நடிக்கும் இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா, கனிகா, மிர்னாலினி ரவி, ரோபோ ஷங்கர் போன்ற பல நட்சத்திரம் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார், வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.  இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியாகவுள்ளது.  

மேலும் படிக்க | தனுஷை தொடர்ந்து 21 வயது இளைஞராக நடிக்கும் சிம்பு!

அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர்.  இப்படத்தின் டீசர் பிரம்மாண்டமாக தஞ்சையில் வெளியிடப்பட இருக்கிறது.  கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை திரைவடிவில் காண பலரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

அதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' திரைப்படம் ஏறுதழுவுதலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.  இப்படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.  சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான 'அயலான்'  படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.  இதில் ரகுல் ப்ரீத் சிங் இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானு ப்ரியா, பால சரவணன் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  நீண்ட நாள் கிடப்பில் கிடக்கும் இந்த படத்திற்கு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விஜய் படத்தின் சாதனையை முறியடித்த 'விக்ரம்'!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News