பொன்னியின் செல்வன் டீசர் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

மணிரத்திரம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 7, 2022, 11:55 AM IST
  • செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது பொன்னியின் செல்வன் படம்.
  • படத்தின் புரமோஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
  • நாளை படத்தின் டீசர் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் டீசர் எப்போது? வெளியான முக்கிய தகவல்! title=

மணிரத்தினம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் சூழ பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ளது.  இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படம் சோழர்களை பற்றி கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.  மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Ponniyin selvan

மேலும் படிக்க | மீண்டும் முதலிருந்து தொடங்கப்படுகிறதா இந்தியன் 2? படப்பிடிப்பு எப்போது?

இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகெங்கும் வெளியாக உள்ளது.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, பலரும் திரையில் கண்டு மகிழ ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் படங்களில் இப்படமும் ஒன்று.  இப்படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது.  தற்போது படத்தின் டீஸர் வெளியீடு நாளை மாலை 6 மணியளவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.  இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை கலந்துகொள்ளுமாறு படக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், "எங்களது 'பொன்னியின் செல்வன் பாகம்-1' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா வரும் ஜூலை 8, 2022 மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது.  'பொன்னியின் செல்வன் பாகம்-1' செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.  1950களில் பத்திரிக்கை தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பி படிக்கப்படும் அமரர் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம்  உருவாக்கி உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

ps1

மேலும் படிக்க | இத்தனை தியேட்டர்களா?... பிரமாண்டமாக வெளியாகிறது தி லெஜண்ட் - வாய் பிளக்கும் கோலிவுட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News