விக்னேஷ் சிவன் - நயன்தாராவை சந்தித்த பாலிவுட் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்

விக்னேஷ் சிவனையும், நயனையும் சந்தித்த பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தனது வாழ்த்தை தெரிவித்தார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 11, 2022, 05:19 PM IST
  • நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது
  • தற்போது நயன் ஜவான் படத்தில் நடித்துவருகிறார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவை சந்தித்த பாலிவுட் பிரபலம் - வைரலாகும் புகைப்படம் title=

நானும் ரௌடிதான் படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. இருவரும் ஒரேவீட்டில் இருந்துவந்த சூழலில் இவர்களது திருமணம் கடந்த மாதம் நடந்தது. 

மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடந்த இத்திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இந்தத் திருமணத்தில் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுத்ததாக தகவல் வெளியானது.

Nayanthara, Rajini

இதற்கிடையே, தங்களது திருமணத்தையொட்டி தமிழ்நாட்டில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இருவரும் உணவு ஏற்பாடு செய்தனர். அவர்களது இந்த செயல் பரவலான வரவேற்பைப் பெற்றது. 

மேலும் படிக்க | சொத்து பிரச்சனையால் தத்தளித்த சிவாஜி குடும்பம்; அந்த திருமணம் தான் காரணமா?

திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், உங்களது ஆதரவும் அன்பும் தொடர்ந்து எங்களுக்கு வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தனர்.

இதனையடுத்து நயனும், விக்னேஷ் சிவனும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. 

Nayan

ஹனிமூனை முடித்திவிட்டு நாடு திரும்பிய நயன், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜவான் படப்பிடிப்பு முடிய தொடர்ந்து தாமதமானதால் விரைவில் அப்படத்தை முடிக்க திட்டமிட்டு அட்லீ பணியாற்றிவருகிறார். எனவே தனது போர்ஷனையும் சீக்கிரம் முடிப்பதற்காக நயன் தற்போது மும்பையில் முகாமிட்டிருக்கிறார்.

 

இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல நடிகை மலைக்கா அரோரா நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் சந்தித்தார். அப்போது இருவருக்கும் தனது வாழ்த்தை அவர் தெரிவித்தார்.

Malaika Arora

அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மலைக்கா, “நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் வாழ்த்துகள். உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என குறிப்ப்பிட்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ரோலக்ஸ் சூர்யா பற்றி முதன் முதலாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News