மாரி சீரியல்: மாரியின் குழந்தையுடன் தாரா வீட்டிற்கு வரும் சாஸ்திரி.. எதிர்பாராத ட்விஸ்ட்

Maari TV Serial Online: மாரியின் குழந்தையுடன் தாரா வீட்டிற்கு வரும் சாஸ்திரி.. எதிர்பாராத ட்விஸ்ட் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 24, 2024, 03:30 PM IST
  • மாரியின் குழந்தையுடன் தாரா வீட்டிற்கு வரும் சாஸ்திரி.
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
மாரி சீரியல்: மாரியின் குழந்தையுடன் தாரா வீட்டிற்கு வரும் சாஸ்திரி.. எதிர்பாராத ட்விஸ்ட் title=

Maari TV Serial Online: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் துரத்த குழந்தையுடன் ஓடி வந்து காரில் விழுந்த சாஸ்திரியை சூர்யா காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சூர்யா அவர்களை வீட்டிற்கு கொண்டு போய் விட்டு வருவதோடு அந்த குழந்தைக்கு பொம்மைகளையும் வாங்கி கொடுத்து விட்டு வருகிறான். அடுத்து தாரா சூர்யாவிடம் அடி வாங்கி ஹாஸ்பிடலில் அட்மிட்டான ரவுடிகளை சென்று பார்க்கிறாள். 

மேலும் படிக்க | மே10ம் தேதி வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு திரைப்படம்!

அவர்களிடம் அந்த குழந்தையை எங்க பார்த்தீங்க? எந்த ஏரியால பார்த்தீங்க என்று விசாரித்து கொண்டிருக்க ரவுடி விஷயத்தை சொல்ல போகும் சமயத்தில் அங்கு வந்து பாம்பு ஒன்று அவனை கொத்த விஷயத்தை சொல்லாமல் உயிரை விடுகிறான். இதனால் தாராவுக்கு எதுவும் தெரியாமல் போய் விடுகிறது. 

மாரி குழந்தையை நினைத்து கவலையில் இருக்க தங்களது குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த ஜெயினை ஸ்ரீஜா, ஹாசினி குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷனில் வைத்து போட்டு விடலாம் என்று சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்குகிறாள். அதனை தொடர்ந்து மாரி சூர்யா சென்றிருந்த கோவில் அய்யர் சாஸ்திரிக்கு போன் செய்து எனக்கு தெரிந்தவங்க வீட்டில் குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷன் இருக்கு. வழக்கமா நான் தான் அந்த வீட்டு பங்க்ஷன்களுக்கு போவேன், இப்போ வெளியே போறதால என்னால போக முடியாது நீங்க போயிட்டு வாங்க என்று சொல்கிறார். 

ஆனால் சாஸ்திரி என்கிட்ட குழந்தைக்கு இருக்கு, குழந்தையை விட்டு தனியா போக முடியாது என்று சொல்ல அவங்க எனக்கு நல்லா தெரிந்த நல்ல குடும்பம் தான். நீங்க குழந்தையோடவே போங்க. ஒன்னும் சொல்ல மாட்டாங்க என்று சொல்ல சாஸ்திரியும் ஓகே சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News