MS Bhaskar:வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்! என்ன சொன்னார் தெரியுமா?

Latest News MS Bhaskar : பிரபல குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கரின் சமீபத்திய மேடைப்பேச்சு ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அவர் அப்படி என்னதான் பேசினார்?  

Written by - Yuvashree | Last Updated : Jun 14, 2024, 01:23 PM IST
  • லாந்தர் பட விழாவில் பேச்சு
  • வம்பில் மாட்டிக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்
  • என்ன சொன்னார் தெரியுமா?
MS Bhaskar:வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட எம்.எஸ்.பாஸ்கர்! என்ன சொன்னார் தெரியுமா?  title=

Latest News MS Bhaskar : தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 37 வருடங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர், எம்.எஸ்.பாஸ்கர். ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக இருந்தவர் தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் என்பதைத் தாண்டி நல்ல கலைஞராகவும் திரை உலகில் நற்பெயரை பெற்றிருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமின்றி பிரபல தொடர்களான சின்ன பாப்பா பெரிய பாப்பா மற்றும் அரசி ஆகிய தொடர்களும் இவருக்கு பெருமை சேர்த்தன. 

சர்ச்சையை கிளப்பிய பேச்சு: 

ராட்சசன், கட்டா குஸ்தி, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட விஷ்ணு விஷாலின் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஷாஜி சலீம். இவர் இயக்கியிருக்கும் லாந்தர் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் விதார்த், விபின், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இசை வெளியீட்டு விழாவிலும் இந்த படக் குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எம் எஸ் பாஸ்கர், படம் பிடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இந்த படம் நன்றாகவே இல்லை யாரும் சென்று பார்க்காதீர்கள் என்று யாரிடமும் கூற வேண்டாம் என்றும் பேசியிருந்தார். மேலும் 150 ரூபாய் அல்லது 200 ரூபாயை வைத்து யாரும் கோபுரம் கட்டப்போவதில்லை என்று பேசிய அவர் ரசிகர்கள் டிக்கெட் காக கொடுக்கும் விலை ஒரு குடும்பத்தையே வாழவைக்கும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றும் கூறினார். ஒரு படம் வெளியாகும் போது அதில் பல கலைஞர்கள் உழைப்பார்கள் என்றும் இது போன்ற விமர்சனங்களால் அந்த படம் தோல்வியுற்று, அதில் வேலை செய்தோரின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

ரசிகர்கள் அதிர்ச்சி: 

எம் எஸ் பாஸ்கரை இதுவரை இதுபோன்ற கோபமாக பேசிய அல்லது சர்ச்சைக்குரிய வகையில் பேசியோ யாரும் பார்த்ததில்லை. இவர் இவ்வாறு பேசியது தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 

மேலும் படிக்க | அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

150 ரூபா னா சும்மாவா? 

எம் எஸ் பாஸ்கரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர், படம் பார்க்க வருபவர்களும் அந்த 150 ரூபாயை மிகவும் சிரமப்பட்டு தான் சம்பாதிக்கிறார்கள் என்றும் அது ஏன் அவர்கள் மொக்கை படத்தை பார்த்து வீணாக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

அவர் பேசியது சரியா? 

எம் எஸ் பாஸ்கரின் கருத்து குறித்து பேசி வரும் ரசிகர்கள், தற்போதைய சமூக வலைதள வளர்ச்சிகளினால், பலர் தங்களுக்கு வந்த கருத்தை விமர்சனமாக எல்லா படங்களுக்கும் கொடுப்பதாகவும் இது உண்மையாகவே நல்ல படங்களை பாதிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். அதனால் எம் எஸ் பாஸ்கர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | எம்எஸ் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்! பிரமாண்டமாக நடைபெற்ற இசை வெளியீட்டு விழா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News