நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவாகுவா… ஆண் குழந்தை பிறந்தது!

சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆராதனா என்ற பெண் குழந்தையும் இந்த தம்பதிகளுக்கு உண்டு. மகனின் வரவு பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 12, 2021, 04:22 PM IST
  • நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவாகுவா
  • சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்தான்
  • மகனின் வரவை நெகிழ்ச்சியூட்டும்பதிவாக வெளியிட்ட பாச மகன் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் குவாகுவா… ஆண் குழந்தை பிறந்தது! title=

சென்னை: தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசியர் என பல அவதாரங்களை எடுத்து அதை சிறப்பாக செய்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆராதனா என்ற பெண் குழந்தையும் இந்த தம்பதிகளுக்கு உண்டு. மகனின் வரவு பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

”18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவிக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி” என்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சோகம் இழையோடுவதையும் காண முடிகிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா? 

சிவகார்த்திகேயன் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களுக்குள் அப்பா இறந்துபோனார். குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழலில், தனக்குள்ளே இருந்த மிமிக்ரி திறமை மூலம் வாழ்க்கையில் முன்னேறினார் இந்தக் கலைஞர்.

மிமிக்ரி செய்து தொண்டை வலித்தாலும், அதைப் பற்றி வெளியே சொல்லாமல் மறைக்கும் அளவுக்கு பக்குவம் இருந்தது.  அவரது திறமையும், விடா முயற்சியும் உழைப்பும் இன்று தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.  

Also Read | சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு– இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த 6 ஆண்டுகளாக சிவகார்த்திகேயனின் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில். 'கீப் யுவர் பேரண்ட்ஸ் ஹேப்பி... லைஃப் வில் பி தெ ஹேப்பியஸ்ட்...' என்ற வாசகத்தை வைத்திருக்கிறார். இன்று மட்டுமல்ல, என்றுமே சிவகார்த்திகேயனுக்கு அவரது குடும்பம் தான் மிகவும் முக்கியாமானது. சிவகார்த்திகேயனின் மகிழ்ச்சிக்கு மகுடம் சூட்ட வந்திருக்கிறார் மகன். வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்!!1

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் அனுதீப், இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ALSO READ | Watch: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News