பதவி ஏற்கும் பரணி! பக்கவாத நாடகத்தால் எதுவும் செய்யமுடியாமல் தவிக்கும் செளந்தரபாண்டி!

Anna Today's Episode Update: பதவி ஏற்ற பரணி.. சௌந்தரபாண்டி ட்விஸ்ட் கொடுத்த ஷண்முகம், நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 28, 2024, 03:21 PM IST
  • பதவி ஏற்ற பரணி
  • சௌந்தரபாண்டிக்கு ட்விஸ்ட் கொடுத்த ஷண்முகம்
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
பதவி ஏற்கும் பரணி! பக்கவாத நாடகத்தால் எதுவும் செய்யமுடியாமல் தவிக்கும் செளந்தரபாண்டி! title=

Anna Today's Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா: இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி பதவியேற்று விழாவில் சௌந்தரபாண்டிக்கு கை, கால் வராததால் கையெழுத்து போட முடியாது என்று முத்துப்பாண்டி சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சௌந்தரபாண்டி கையெழுத்து போட்டால் தான் பரணி பதவியேற்று கோவில் சொத்துக்களை பார்வையிட முடியும் என்று சொல்ல சௌந்தரபாண்டி தரப்பு உடம்பு சரியாகும் வரை கையெழுத்து போட முடியாது என்று சொல்கின்றனர். 

மேலும் படிக்க | Kalki 2898 AD Movie Review : கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?

ஷண்முகம் உன் அப்பனை இப்போ எப்படி ஓட விடுறேன் பாரு என்று சொல்ல பரணி உடம்பு முடியாதவரை எதுக்கு இப்படி சொல்ற என்று கேள்வி கேட்க ஷண்முகம் அவளை தனியாக அழைத்து சென்று சௌந்தரபாண்டு நாடகம் போடும் விஷயத்தை உடைக்கிறான். 

இதையடுத்து ஷண்முகம் சௌந்தரபாண்டியால் கையெழுத்து போட முடியலைன்னா என்ன? அவர் ஏற்கனவே கையெழுத்து போட்டு கொடுத்துட்டாரு என்று சொல்ல எல்லாரும் ஷாக் ஆகின்றனர்.

பதவியில் இருப்பவருக்கு உடம்பு முடியாமல் போய்ட்டால், அவருக்கு பதிலாக அவரது மனைவி கையெழுத்து போடலாம், அதான் என் அத்தை நேத்தே கையெழுத்து போட்டு கொடுத்துட்டாங்க என்று சொல்ல, பாக்கியம் டாகுமெண்ட்டுடன் வருகிறாள். 

இதை பார்த்து அதிர்ச்சியாகும் சௌந்தரபாண்டி பக்கவாத நாடகத்தால் எதுவும் செய்ய முடியாமல் இருக்க பரணி தர்மகத்தாவாக பதவி ஏற்கிறாள், இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன் சௌந்தரபாண்டி வீல் சேரில் வெளியே வர ஷண்முகம் எதிரே வந்து உங்களை ஓட விடுறேனு சொன்னேனே செய்ய வேண்டாமா என்று கேட்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News