16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் நடிகை!

நடிகை லைலா 16 வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 29, 2022, 03:04 PM IST
  • 16 வருடத்திற்கு ரீன்ட்ரி கொடுக்கும் லைலா.
  • கார்த்தி படத்தில் நடிக்கிறார்.
  • ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.
16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் நடிகை! title=

தமிழ் சினிமாவில் நடிகை லைலாவை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.  திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகியிருந்த இவர் தற்போது 16 வருடங்களுக்கு பிறகு ஒரு முன்னணி ஹீரோவின் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்கிற தகவல் நீண்ட நாட்களாகவே இணையத்தில் வட்டமடித்து வந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதியாகியுள்ளது.  அர்ஜுன் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதனையடுத்து கதாநாயகியாக உயர்ந்த இவர்  கார்த்திக், விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

laila

மேலும் படிக்க | அவரும் இல்ல, இவரும் இல்ல: ‘விஜய்-66’ ஹீரோயின் இவங்கதானாம்!

அதிலும் குறிப்பாக தீனா, தில், மௌனம் பேசியதே, உன்னை நினைத்து, பிதாமகன் போன்ற படங்களில் இவரது நடிப்பு அதிகளவு பாராட்டப்பட்டது.  இறுதியாக இவர் பேரரசு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார், அதோடு இவரை திரையில் பார்க்கமுடியாமல் போனது.  அதன்பின்னர் 2005ம் ஆண்டு ஈரானிய தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வலக்கையில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார், தற்போது இவருக்கு பன்னிரண்டு மற்றும் ஒன்பது வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கும் விதமாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

laial

கார்த்தி நடிப்பில் உருவாகும் 'சர்தார்' படத்தில் தான் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது, இந்த தகவலை படக்குழுவும் சமூக வலைத்தளங்களில் படப்பிடிப்பு தளத்தில் லைலா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளது.  இந்த படத்தில் ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், மேலும் முனீஸ்காந்த், முரளி சர்மா, சன்கி பாண்டே போன்ற பலர் நடிக்கின்றனர்.  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.  மேலும் இப்படத்திற்கு சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார்.

மேலும் படிக்க | கேஜிஎப் 2 படத்தால் பிரபாஸின் கெரியருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News