இரண்டாவது திருமணமா?... விளக்கமளித்த நடிகை

கணவரை கடந்த 2020ஆம் ஆண்டு இழந்த நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் நடக்குமா என்பது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 22, 2022, 04:30 PM IST
  • தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார் மேக்னா ராஜ்
  • இவர் சிரஞ்சீவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்
  • சிரஞ்சீவி கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார்

Trending Photos

 இரண்டாவது திருமணமா?... விளக்கமளித்த நடிகை title=

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா மற்றும் நந்திதா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் மலையாளம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருப்பவர். இவர் சில வருடங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருந்த சிரஞ்சீவி சர்ஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் பையனும் இருக்கிறான். இந்தச் சூழலில் கடந்த 2020ஆம் ஆட்னு ஜூன் 7ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி உயிரிழந்தார். சிரஞ்சீவி மரணமடையும்போது மேக்னா ராஜ் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.கணவர் உயிர் இழந்த சோகத்தில் இருந்த மேக்னாராஜ், அதில் இருந்து மீண்டு சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நடிகை மேக்னாராஜ். அப்போது அவரிடம் இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “மனது என்ன சொல்லும். எனது கணவர் இறந்த பின்பு, என்னுடைய குழந்தையை வளர்ப்பது, அவனது எதிர்காலம் பற்றிதான் சிந்தித்து வருகிறேன்.

Meghna Raj

ஒரு சிலர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்படி என்னிடம் கூறுகிறார்கள்.சிலர் சிரஞ்சீவி சர்ஜாவின் நினைவில் வாழும்படியும் கூறுகிறார்கள். எனது கணவர் எப்போதும் ஒன்றை சொல்வார். யார் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், அதனை கேட்க வேண்டும், ஆனால் இறுதியில் முடிவு எடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும் என்பார்.

மேலும் படிக்க | சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் ஃபாலோ பண்ணுங்க - தமிழிசை வேண்டுகோள்

தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் நாட்களில் எனது மனது என்ன சொல்லும் என்பது தெரியவில்லை. எனது எதிர்கால வாழ்க்கை பற்றிய இறுதி முடிவு எடுக்கும் சக்தி எனக்கு உள்ளது. இரண்டாவது திருமண விவகாரத்தில் நான் என்ன முடிவு எடுத்தாலும், சிரஞ்சீவி என்னுடன் எப்போதும் இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லாவற்றையும் விட எனது குழந்தையின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்தித்து வருகிறேன். எனது மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும். அதுவே எனக்கு இருக்கும் ஆசை” என்றார்.

மேலும் படிக்க | சென்னையில் பாலிவுட் பாட்ஷா ஷாருக் - எதற்காக தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News