கண் தானம் செய்த விஜய் சேதுபதி; ரசிகர்களையும் கண் தானம் செய்ய அறிவுரை

Last Updated : Oct 20, 2017, 12:27 PM IST
கண் தானம் செய்த விஜய் சேதுபதி; ரசிகர்களையும் கண் தானம் செய்ய அறிவுரை title=

மதுரை அகர்வால் கண் மருத்துமனையின் கிளையை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விஜய் சேதுபதி தனது தனது கண்ணை தானம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.

மதுரையில் அகர்வால் கண் மருத்துமனையின் கிளையை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துமனையின் கிளையை திறந்து வைத்தார். அப்பொழுது அவர் பேசுகையில், கண்கள் இல்லையென்றால் இந்த உலகில் எதையும் நீங்கள் ரசிக்க முடியாது. ஆகையால் கண்ணைப் பாதுகாத்துக் கொள்வதும், நமக்குப் பிறகு அதனைப் பிறர் பயன்படுத்த தானம் கொடுப்பதும் அவசியம். தனது கண்ணை தானமாக கொடுப்பதாக அறிவித்தார். மேலும் தன்னுடைய ரசிகர்களையும் கண் தானம் செய்யுமாறு அறிவுறுத்தினார். 

மேலும் ஏழை மக்களுக்கு கண் தானம் சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும் என கேட்டிக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்தும் கலந்து கொண்டார்.

Trending News