'டிமான்டி காலனி' படத்தினால் அருள்நிதிக்கு ஏற்பட்ட பிரச்சனை!

'டிமான்டி காலனி' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 11, 2022, 07:56 AM IST
  • டிமான்டி காலனி படம் 2015ம் ஆண்டு வெளியானது.
  • அருள்நிதி இப்படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார்.
  • இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்தது.
'டிமான்டி காலனி' படத்தினால் அருள்நிதிக்கு ஏற்பட்ட பிரச்சனை! title=

கடந்த 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் திகில் கலந்து விறுவிறுப்புடன் வெளியான தமிழ் திரைப்படம் 'டிமான்டி காலனி'.  இப்படத்தில் ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா போன்ற பலர் நடித்திருந்தனர்.  ஆரம்பத்தில் படம் நகைச்சுவையாக போவது போல தெரிந்தாலும், அடுத்தடுத்து படம் விறுவிறுப்பாக திகில் கலந்து அமைந்திருந்தது.  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்றது, இந்த படத்திற்கு பின்னர் அருள்நிதிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.  இந்த படத்திற்கு கிடைத்த அதிக வரவேற்பை தொடர்ந்து சமீபத்தில் டிமான்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

arulnithi

மேலும் படிக்க | பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி?

டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த அளவிற்கு இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கும்  அதிக வரவேற்பு உள்ளது.  டிமான்டி காலனி படம் வெளியான பின்பு அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் பலரிடம் இருந்தது.  இந்த வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது, இந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாமல் சேதமடைந்து இருப்பதால், இது பேய் பங்களா என்று கூறப்பட்டு வந்தது.  இரவு நேரங்களில் இந்த பகுதியில் பேய்கள் நடமாடுவதாகவும் சில வதந்திகள் பேசப்பட்டு வந்தது.  இந்நிலையில் இப்படத்தில் டிமான்டி காலனியில் பேய் இருப்பதாக வந்ததும் இந்த பகுதிக்கு படையெடுத்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

demontycolony

தற்போது அருள்நிதி இந்த படத்தால் ஏற்பட்ட விபரீதம் குறித்து பேட்டியொன்றில் கூறியுள்ளார், அவர் கூறுகையில், டிமான்டி காலனி படம் வெளியானதில் இருந்து பலர் அந்த பகுதிக்கு இரவு நேரத்தில் சென்று புகைப்படங்கள் எடுப்பதாகவும், இதனை தடுக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பது பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் என் நண்பர்கள் கூறினார்கள்.  அதை கேட்டதும் நானும், அப்படி என்னதான் அங்கு நடக்கிறது என்று பார்ப்பதற்காக அந்த இடத்திற்கு சென்றிருந்தேன்.  அப்போது அங்கு 4 பேர் முட்டிபோட்டு கொண்டிருந்தனர், எங்கள் காரை பார்த்ததும் போலீசார் இந்த பகுதிக்கு வரக்கூடாது செல்லுங்கள் என்று கூறினார்.  பின்னர் காரில் அமர்ந்திருந்த என்னை பார்த்ததும் உங்களால் தான் சார் இவ்வளவு நடக்குது என்று கூறினார், அதோடு இனிமேல் இங்கு யாரும் வராதீர்கள் நாங்களும் வரமாட்டோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | புஷ்பா-2 படத்தில் ராஷ்மிகா இல்லையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News