ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகக்கூடாது: ஜெயக்குமார் பேட்டி!!

ஆடிட்டர் குருமூர்த்தி பட்ஜெட்டைப் முதலில் படித்து விட்டு பின்னர் அரசியல் குறித்து பேச வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!  

Last Updated : May 10, 2018, 02:36 PM IST
ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகக்கூடாது: ஜெயக்குமார் பேட்டி!! title=

ஆடிட்டர் குருமூர்த்தி பட்ஜெட்டைப் படித்து விட்டு பின்னர் அரசியல் குறித்து பேச வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்..!

ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகக் கூடாது. குருமூர்த்தி முதலில் பட்ஜெட்டை படிக்க வேண்டும். அதன்பிறகு அவர் பேச வேண்டும். தமிழகத்தில் வெற்றிடம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எந்த தேர்தல் வந்தாலும், அதிமுகதான் வெற்றி பெறும் என்றார்.

மேலும், சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தது போல், ரஜினியை குருமூர்த்தி கெடுக்கக் கூடாது. காமாலைக்காரனுக்கு எல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். 

காவிரி தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் வெற்றி சாத்தியம் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News