புகை பிடிப்பதில் ஆண்களை மிஞ்சிய பெண்கள், அதிர்ச்சி தகவல்...

புகைபிடிக்கும் விஷயத்தில் கூட பெண்கள் தற்போது ஆண்களை முந்திவிட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?...

Last Updated : Dec 21, 2019, 03:31 PM IST
புகை பிடிப்பதில் ஆண்களை மிஞ்சிய பெண்கள், அதிர்ச்சி தகவல்... title=

புகைபிடிக்கும் விஷயத்தில் கூட பெண்கள் தற்போது ஆண்களை முந்திவிட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?...

ஆம்., புகைப்படிக்கும் விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமாகிவிட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடுகையில்., உலகெங்கிலும் உள்ள ஆண்களை விட பெண்கள் அதிகமாக புகைபிடிப்பதாக தெரிவித்துள்ளது. புகைபிடித்தல் போன்ற ஒரு கொலைகார வேலையில் இந்த வகை புள்ளிவிவரங்கள் வரலாற்றில் முதல்முறையாக வந்துள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பே குறிப்பிட்டுள்ளது.
 
WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அந்தோனோம் கேப்ரியாஸ் கூறுகையில், "புகைபிடிப்பதில் ஆண்கள் அதிகரித்து வருவதை கடந்த தசாப்தங்களாக நாங்கள் கண்டோம். ஆனால் பல்வேறு நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆண்களை விட பெண்கள் அதிகமாக புகைபிடிக்கத் தொடங்குகின்றன என்பதைக் காட்டுகிறது. இவ்வாறு ஒரு அறிக்கை வந்தது இதுவே முதல் முறை." என குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவிலும், உலகளாவிய வயதுவந்தோர் புகையிலை கணக்கெடுப்பில் (GATS), புகையிலை மற்றும் புகைபிடித்தல் பிரச்சினையில் பெண்கள் ஆண்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறப்படுகிறது. 

புகைபிடித்தல் அல்லது புகையிலை பொருட்களின் பயன்பாடு புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கிறது என்பது பல்வேறு ஆராய்ச்சிகளில் தெளிவாகியுள்ளது. இந்த தயாரிப்புகளின் பயன்பாடு காரணமாக, இதய நோய், மாரடைப்பு மற்றும் பிற தொற்று அல்லாத நோய்கள் ஏற்படுகின்றன. உலகெங்கிலும் புகைபிடித்தல் மற்றும் பிற புகையிலை பொருட்களின் நுகர்வு காரணமாக சுமார் 8 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்றும் WHO அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, செயலற்ற புகைப்பால் மட்டுமே சுமார் 1.2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Trending News