‘ஒருவேளை திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்திருந்தால்...’ ஒரு இளம்பெண்ணின் சோக கதை!

புனிதமான காதல் துவங்கி எந்தவொரு உறவிலும் இறுதியாக எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்று உடலுறவு. உறவில் துவங்கி பின்னர் உடலுறவுக்கு இட்டுச் செல்வது தற்போதைய காலக்கட்டத்தில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

Last Updated : Mar 15, 2020, 04:44 PM IST
‘ஒருவேளை திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்திருந்தால்...’ ஒரு இளம்பெண்ணின் சோக கதை! title=

புனிதமான காதல் துவங்கி எந்தவொரு உறவிலும் இறுதியாக எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்று உடலுறவு. உறவில் துவங்கி பின்னர் உடலுறவுக்கு இட்டுச் செல்வது தற்போதைய காலக்கட்டத்தில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

பாரம்பரிய நாடுகளில் திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது இன்னும் பலருக்கு தடைசெய்யப்பட்ட பிரச்சினையாக உள்ளது, ஆனால் மேலை நாட்டினர் அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. என்றபோதிலும் மேலை நாட்டை சேர்ந்த ஒரு கணவன் தனது மனைவியை உடலுறவு கொள்ள திருமணம் வரை காத்திருக்க வைத்துள்ளார்.

இதில் என்ன ஆச்சரியம் என்று உங்களுக்கு தோன்றலாம்., அவர் காத்திருக்க வைத்தது ஆச்சரியமான விஷயம் இல்லை, ஆனால் காத்திருக்க வைத்ததற்கான காரணத்தை நீங்கள் கேட்டாள் நிச்சையம் ஆச்சரியப்படுவீர்...

காதல் திருமணம் செய்துக்கொண்ட இவர் இறுதியாக ஒரு தேனிலவுக்குச் சென்றபோது தான் அவரது காத்திருப்புக்கான காரணம் தெரியவந்தது. ஆம் தேனிலவு சென்ற இந்த காதல் ஜோடிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

மார்க் ஜோவன் என அறியப்பட்ட அவருக்கு சிறிய ஆணுறுப்பு இருந்ததன் காரணமாக தனது காதலியை அந்தரங்க உறவிற்கு இத்தனை நாட்களாக காக்க வைத்துள்ளார் என்ற உண்மை அன்று தான் தெரியவந்தது. தனது கணவனுக்கு மிகச்சிறிய அளவு உறுப்பு இருப்பதைக் கண்டு அவள் அதிர்ச்சியடைந்தாள். ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்தப் பெண், தனது விரக்தியை வெளிப்படுத்த ரெடிட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் குறிப்பிடுகையில், தானாக அழைத்தப்போதும் வேண்டாம் என தனது காதலன் மறுத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தாங்கள் வெறும் 6 மாதங்களுக்கே டேட்டிங் செய்ததாகவும், உடலுறவு குறித்து பேசும்போது எல்லாம் திருமணத்திற்கு பிறகு தான் அனைத்தும் என மறுத்து வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் நிச்சயதார்த்தம் நிகழந்தபோதிலும் அவர் படுக்கையில் இறங்க விரும்பவில்லை என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயதார்த்தத்தின் 6 மாதங்களுக்குப் பிறகு, இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. திருமணத்திற்கு பின்னர் தேனிலவுக்கு சென்றுள்ளனர். இந்த தேனிலவில் தான் அனைத்தும் வெளியாகியுள்ளது.

ஏமாற்றத்திற்கு உள்ளான அந்த இளம்பெண் தனது கோபம் நியாயமான ஒன்று தானா என்ற இணையத்தில் தேடினார். உலகெங்கிலும் உள்ள சராசரி ஆண்குறி அளவு என்ன? எந்த நாடுகளில் மிகப்பெரிய மற்றும் சிறிய ஆண் பிறப்புறுப்புகள் உள்ளன என்பதை அலசி ஆராய்ந்தால்... தனது வேதனை குறித்து கட்டுரையாக வெளியிட்டால். இந்த இடுகையினை பார்த்த பலர் அவளுக்கு அனுதாபம் தெரிவித்தனர்.

என்றபோதிலும் இது அவரது கணவனின் உறுப்பின் அளவை குறித்த பிரச்சினை அல்ல, அவரது கணவர் அவளிடம் பொய் சொன்னார் என்பதன் ஆதங்கம். "இது ஒரு தீவிர நம்பிக்கை பிரச்சினை" என்று மற்றொரு நபர் பதிவிட்டிருந்தார். நிச்சையம்., உறவுகளுக்கு இடையில் உடலுறவு என்பது மட்டும் வாழ்க்கை இல்லையே., இருவருக்கும் இடையிலான நம்பிக்கை தான் இங்கு முக்கியம்.

Trending News