இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?

Lifestyle Tips : இரவில் தூங்க செல்லும் முன் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால், பல வாழ்க்கை முறை நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 4, 2024, 06:19 AM IST
  • இரவில் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?
  • இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்
  • தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா? title=

Lifestyle Tips : ஒவ்வொருவரும் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் அதிகமாக தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஆனால் இரவில் தூங்க செல்லும்முன் நிறைய தண்ணீரை குடிக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. உண்மையில் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் அதிகமாக தண்ணீரை குடிக்கக்கூடாது. அது ஏன் என்பதற்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். 

இரவில் தூங்கச் செல்லும் முன் தண்ணீர் குடிக்க வேண்டும், தண்ணீர் குடிக்கக்கூடாது என்ற இருவேறு கருத்துகளும் மருத்துவர்களிடம் இருக்கிறது. ஒரு சிலர் குடிக்கலாம் என்றும், ஒரு சிலர் குடிக்கக்கூடாது என்றும் கூறுகின்றனர். ஒருவேளை தினமும் இரவில் குடித்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1. இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், மீண்டும் மீண்டும் பாத்ரூம் செல்ல வேண்டும். இதனால் தூக்கம் கெடுகிறது. உங்கள் தூக்கம் சார்ந்த ஆரோக்கியம் ஏற்கனவே மோசமாக இருந்தால், இரவில் அடிக்கடி எழுவது என்பது பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். அதாவது, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, எடை அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

2. சர்க்கரை நோய், இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் இரவில் தூங்கும் முன் அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் இந்த நோயாளிகளுக்கு இரவு தூக்கம் அவசியம்.

எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்?

இரவில் தூங்குவதற்கு சற்று முன் தண்ணீர் குடிக்கக் கூடாது. தூங்குவதற்கு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் முன்பு தண்ணீர் குடிக்கலாம். இது உங்கள் உடலுக்கு மிகவும் நன்மையானது. சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம். இது இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தடுக்கும். உங்கள் தூக்கமும் தொந்தரவு செய்யாது. தினமும் சுமார் 8 மணி நேரம் தூங்குவது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கம் பாதிக்காமல் இருந்தால் ஆரோக்கியம் மேலோங்கும். 

தினமும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் : 

மனித உடலின் 60% அதிகமாக நீரின் அளவு கொண்டுள்ளது. எனவே, உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் முக்கியமான நன்மைகளை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | Break Up : காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர...ஈசியான 8 வழிகள்

1. உடல் நீர் இழப்பை தடுக்கும்

தண்ணீர் குடிப்பது உடல் நீர் இழப்பை தடுக்கும். தோல் நோய்கள், சோடியம் மற்றும் பிற உப்பு சத்துக்கள் காரணமாக ஏற்படும் நீரேற்பத்தை நீக்க, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம்.

2. செரிமானத்தை மேம்படுத்தும்
தண்ணீர் உடலின் செரிமான செயலியை மேம்படுத்த உதவுகிறது. தண்ணீர் மற்றும் ஜூஸ்கள் குடிப்பது எளிதாக செரிக்க உதவுகிறது. இது மலம் வெளியேற்றத்தை சீராகக்கும்

3. சருமத்தை மேம்படுத்தும்
தண்ணீர் சருமத்தை ஈரமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீர் சருமத்தில் உள்ள நீர்சத்து அளவை சீராக வைத்திருப்பதோடு, சருமம் பிரகாசமாகவும் சீராகவும் இருக்க உதவுகிறது.

4. உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும்
தண்ணீர் சிறுநீரின் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு நச்சுக்கள் வெளியேறுவதன் மூலம், சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

5. எடை குறைய உதவுகிறது
தண்ணீர் குடிப்பது எடையை குறைக்க உதவக்கூடியது. உணவுக்கு முன் தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்களை முழுமையாக உணர முடியும். இதனால், அதிகமாக சாப்பிடாமல் இருப்பதுடன், உங்கள் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

6. மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்
தண்ணீரின் குறைபாடால், மூளை செயல்பாட்டில் வீழ்ச்சி ஏற்படுகிறது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், மூளை செயல்பாடு சீராகவும் அதிகரித்துவிடும்.

7. உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும்
தண்ணீர் உடலில் உள்ள வெப்பநிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீர் குடிப்பதால், உங்களை குளிர்ச்சியாக உணர முடியும். உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் இருப்பதற்கு தண்ணீர் மிகவும் அவசியம்.

8. இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்
தண்ணீர், இரத்தத்தில் உப்பு மற்றும் சோடியம் அளவை சீராக வைத்திருப்பதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மூட்டுக்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் விவகாரத்திற்கு இது தான் காரணம்! இந்த தவறை செய்ய வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News