யார் யார் இரத்த தானம் செய்யலாம்? இரத்த தானம் செய்வதற்கு முன் இதனை தெரிஞ்சுக்கோங்க!

World Blood Donor Day: இரத்த தானம் செய்வது உடலுக்கும் மனதிற்கும் நல்லது என்று கூறப்படுகிறது. இரத்த தானம் செய்வதற்கு முன்பு சில விஷயங்களை மனதில் வைத்து கொள்வது நல்லது.  

Written by - RK Spark | Last Updated : Jun 13, 2024, 06:19 AM IST
  • 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்.
  • இதனால் உடலில் எந்த கெடுதலும் ஏற்படாது.
  • தீவிர பரிசோதனைக்கு பிறகே இரத்தம் எடுத்துக்கொள்ளப்படும்.
யார் யார் இரத்த தானம் செய்யலாம்? இரத்த தானம் செய்வதற்கு முன் இதனை தெரிஞ்சுக்கோங்க! title=

World Blood Donor Day: உலக இரத்த தான தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் 14ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன் மூலம் தேவையான மக்கள் பயனடைய முடியும். ஒருவர் இரத்த தானம் செய்வதால் மற்றொருவரின் உயிரை காப்பாற்ற முடியும். இப்படிப்பட்ட ஒரு மாகத்தான சேவையை செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒருவருக்கு நோய் ஏற்பட்டாலும், அறுவை சிகிச்சை செய்யும் பொதும், இரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது இல்லது பிரசவத்தின் போது இரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. நோயாளியின் தேவைக்கேற்ப இரத்த வங்கியில் இருந்து இரத்தம் கொடுக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | மதுரையில் இருந்து பத்ரிநாத் - கேதார்நாத்... IRCTC வழங்கும் அசத்தலான பேக்கேஜ்..!!

 

யார் யார் இரத்த தானம் செய்யலாம்?

பொதுவாக இரத்த தானம் அனைவரும் செய்யலாம். ஆனால் ஆரோக்கியத்தில் பிரச்சனை உள்ளவர்கள், தீவிர உடல்நல கோளாறு உள்ளவர்கள், மருந்து எடுத்து கொள்பவர்கள், மஞ்சள் காமாலை உள்ளவர்கள், இரத்த சோகை உள்ளவர்கள் இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இரத்த தானம் செய்யும் போது நமது உடலில் இருந்து ஒரு யூனிட் இரத்தம் எடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் நமது உடலில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. இது எந்த ஒரு நோயையும், உடல் பலவீனத்தையும் ஏற்படுத்தாது. இந்த இரத்தம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் உடலில் உற்பத்தி ஆகிவிடும். தற்போது அதிக பாதுகாப்புடன் இரத்தம் எடுக்கப்படுகிறது. எனவே இரத்த தானத்தின் போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்வதற்கு முன்

நீங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினால் உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம். எப்போதுமே வெறும் வயிற்றில் இரத்த தானம் செய்யக்கூடாது. மேலும் இரத்த தானம் செய்த பிறகு நல்ல பானங்கள் மற்றும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை படபடப்பாக, பலவீனமாக இருந்தால் உடனே எந்த வேளையும் செய்யாமல் ஓய்வு எடுப்பது நல்லது. 

இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

பொதுவாக இரத்தம் பல்வேறு வகைகளில் உள்ளது. A, B, O என பிரிக்கப்படுகிறது. இரத்த தானம் செய்யும் போது நமது இரத்தத்தின் வகையை பொறுத்து பிரித்து எடுத்துக்கொள்கின்றனர். ஒருசிலருக்கு அரிதான வகை இரத்தம் இருக்கும். அவர்கள் அடிக்கடி இரத்த தானம் செய்வது நல்லது. இரத்த தானம் செய்வதற்கு முன் அவர்களுக்கு முக்கியமாக எச்ஐவி, மலேரியா போன்ற நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை இரத்தம் தானம் செய்யும் போது உங்கள் உடலில் ஏதேனும் நோய் இருந்தால் இரத்தம் எடுத்துக்கொள்ளப்படாது. ஒரு மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம், இருப்பினும் ஒருமுறை இரத்த தானம் செய்தால் மூன்று மாதம் இடைவெளி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | 432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News