தனக்கு திருமணம் செய்துவைத்த புரோகிதருடன் ஓடிப்போன மணப்பெண்!

தனக்கு திருமணம் செய்துவைத்த திருமண புரோகிதருடன் ஓடிப்போன திருமணப்பெண்!!

Last Updated : May 29, 2019, 01:49 PM IST
தனக்கு திருமணம் செய்துவைத்த புரோகிதருடன் ஓடிப்போன மணப்பெண்! title=

தனக்கு திருமணம் செய்துவைத்த திருமண புரோகிதருடன் ஓடிப்போன திருமணப்பெண்!!

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், அது உண்மை தான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், அன்யோநியமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இந்த திருமண உறவு. இருவருக்கும் புது புது உறவுகளை உருவாக்க கூடியது தான் திருமண பந்தம். 

இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கோலாகல கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், கடந்தவாரம் மத்திய பிரதேசத்தில் மணப்பெண் ஒருவர் தனக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆசாத் என்ற பகுதியை சேர்ந்தவர் வினோத் மகராஜ் என்பவர் ஒரு திருமண புரோகிதர். அவர்கடந்த 23 ஆம் தேதி ஒரு திருமணத்தை நடத்தி வைக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்நிலையில், திருமண நாளன்று திருமண வீட்டார் வினோத்தை தேடும் போது அவரை வீட்டில் காணவில்லை. 

இதுகுறித்து, திருமண வீட்டார் அக்கம்பக்கத்தில் விசாரிக்கும் போது, அவர் தான் கடந்த மே 7 ஆம் தேதி திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணமான 3 நாட்களில் அந்த பெண் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். அதுமட்டும் இன்றி, அந்த பெண் வினோத்துடன் ஓடி போகும் போது வீட்டில் இருந்த ரூ1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றதும் தெரியவந்தது. 

இதில் இன்னொரு சுவாரஷ்யமான தகவல் என்ன என்றால், னோத்திற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தை உள்ளதாம். மேலும், அவர் அந்த பெண்ணுடன் போகும்போது தனது குடும்பத்தினரையும் அவருடன் அழைத்து சென்ற கேளிக்கையான சம்பவமும் அரங்கேறியுள்ளது. 

 

Trending News