இனி ரயிலில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யாலாம்!!

மத்திய ரயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது!!

Last Updated : Jul 18, 2018, 08:57 AM IST
இனி ரயிலில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யாலாம்!! title=

மத்திய ரயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது!!

மத்திய ரயில்வே துறை மும்பையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை எக்ஸ்பிரஸ், கோனார்க் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-ஹஸ்ரட் நிஜாமுதின், துரண்டோ உள்ளிட்ட 3 ரயில்களின் ஏ.சி. பெட்டியில் ஷாப்பிங் செய்யும் வசதியை மத்திய ரயில்வே துறை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

இது குறித்து மத்திய ரயில்வே அதிகாரி கூறுகையில், தற்போது சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மற்ற ரயில்களில் இந்த வசதி செய்யப்படும். இதில், அழகுசாதன பொருட்கள், ஹெட்போன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். 

Trending News