Post Office: அட்டகாசமான திட்டம், நாளொன்றுக்கு ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெறலாம்

Post Office Scheme: பாதுகாப்பான, அதிக வருமானம் தரும் அத்தகைய திட்டத்தில் நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக திட்டம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2022, 10:51 AM IST
  • தபால் அலுவலகத்தில் பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.
  • இவை மிகவும் பாதுகாப்பானவை.
  • இவற்றில் நல்ல வருமானம் கிடைக்கும்.
Post Office: அட்டகாசமான திட்டம், நாளொன்றுக்கு ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெறலாம் title=

தபால் அலுவலகத் திட்டம்: தபால் அலுவலகத்தில் செய்யப்படும் முதலீடு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. உண்மையில், எந்தவொரு முதலீட்டிலும் பொதுவாக ஒரு ஆபத்து காரணி இருக்கும். ஆனால், அனைவரும் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பணம் பாதுகாப்பாக இருந்து, எந்த வித ரிஸ்கும் இல்லாமல், சிறந்த வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என்றே பலர் விரும்புகிறார்கள். 

பாதுகாப்பான, அதிக வருமானம் தரும் அத்தகைய திட்டத்தில் நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக திட்டம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். 

35 லட்சம் ரூபாய் கிடைக்கும்

அஞ்சல் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் ரிஸ்க் காரணியும் குறைவு, அதே சமயம் வருமானமும் நன்றாக இருக்கும். ரிஸ்க் மிகக் குறைவாகவும், லாபமும் நன்றாக இருக்கும் முதலீட்டுக்கு இதை தவிர ஒரு சிறந்த தேர்வு இருக்க முடியாது. 

மேலும் படிக்க | சிறந்த வருமானம் தரும் போஸ்ட் ஆபிஸ் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள்

இந்த பதிவில் நாம் தபால் அலுவலகத்தின் 'கிராம் சுரக்ஷா திட்டம்' பற்றி காணலாம். இந்தியா போஸ்ட் வழங்கும் இந்த பாதுகாப்புத் திட்டம், குறைந்த அபாயத்துடன் நல்ல வருமானத்தைப் பெறக்கூடிய ஒரு திட்டமாகும். இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகையை தொடர்ந்து டெபாசிட் செய்வதன் மூலம், வரும் காலத்தில் 31 முதல் 35 லட்சம் வரை பலன் கிடைக்கும்.

முதலீடு செய்வதற்கான விதிகள் இதோ:

- 19 முதல் 55 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

- இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம்.

- இந்த திட்டத்தின் பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தலாம்.

- பிரீமியம் செலுத்த 30 நாட்கள் தளர்வு கிடைக்கும்.

- இந்தத் திட்டத்தில் நீங்கள் கடனும் பெறலாம்.

- இந்தத் திட்டத்தை எடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் அதை சரண்டர் செய்யலாம். ஆனால் இந்த சூழ்நிலையில் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.

மிகவும் பயனுள்ள திட்டம்

ஒருவர் 19 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து 10 லட்ச ரூபாய் பாலிசி வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருடைய மாதப் பிரீமியம் 55 ஆண்டுகளுக்கு ரூ.1515 ஆகவும், 58 ஆண்டுகளுக்கு ரூ.1463 ஆகவும், 60 ஆண்டுகளுக்கு ரூ.1411 ஆகவும் இருக்கும். 

அத்தகைய சூழ்நிலையில், பாலிசி பெறுபவர் 55 ஆண்டுகளுக்கு ரூ.31.60 லட்சமும், 58 ஆண்டுகளுக்கு ரூ.33.40 லட்சமும், 60 ஆண்டுகளுக்கு ரூ.34.60 லட்சமும் முதிர்வுப் பலனைப் பெறுவார்.

மேலும் படிக்க | Post Office சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி: அட்டகாசமான வசதி துவங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News