PM KISAN 11th installment: மார்ச் 31க்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்

ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒவ்வொரு 2,000 ரூபாய் வீதம் ஒரு வருடத்தில மூன்று சம தவணைகளில் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2022, 02:23 PM IST
  • PM-KISAN திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டது.
  • சில விலக்குகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • ஒரு நிதி ஆண்டில் 3 தவணைகளில் ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது.
PM KISAN 11th installment: மார்ச் 31க்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் title=

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்தத் தொகை தலா 2000 ரூபாய் என மூன்று தவணைகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிஎம் கிசான் திட்டம் துவக்கப்பட்ட போது சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக தலா ரூ.2,000 செலுத்தி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. தற்போது ஐந்து மாநில தேர்தலுக்கு முன் 10வது தவணையை மத்திய அரசு வழங்கியது. அதன்படி பிரதமர் கிசான் நிதியின் பயனாளிகள் 11வது தவணைக்காக காத்திருக்கின்றனர். 

இதனிடையே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாய பயனாளிகள் தங்கள் எதிர்கால தவணைகளை உறுதி செய்ய ஒரு முக்கியமான செயல்முறையை முடிக்க வேண்டும். எதிர்காலத்தில் செலுத்தப்படும் தவணை முறை நிதியை பெற விவசாயிகள் இ-கேஒய்சி செயல்முறையை இந்த மாத இறுதிக்குள் அதாவது மார்ச் 31, 2022க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லை என்றால் அவர்களால் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் மூலம் வழங்கப்பட உள்ள 11வது தவணையைப் பெற முடியாது.

மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள் 

இந்த நிலையில், விவசாயிகள் இ-கேஒய்சி எவ்வாறு செய்வது என்பதை விரிவாக பார்ப்போம்.

செயல்முறை எண். 1: முதலில் உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் பிஎம் கிசான் இணையதளத்தை (pmkisan.gov.in) திறக்கவும். இங்கே இ-கேஒய்சி இன் இணைப்பு வலது பக்கத்தில் காணப்படும்.

செயல்முறை எண் 2 : இங்கே ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு தேடல் பொத்தானைத் தட்டவும். இப்போது உங்கள் மொபைலில் 4 இலக்க ஓடிபி வரும். கொடுக்கப்பட்ட பெட்டியில் டைப் செய்யவும்.

செயல்முறை எண். 3: மீண்டும் ஆதார் அங்கீகாரத்திற்கான பொத்தானைத் தட்டுமாறு கேட்கப்படுவீர்கள். அதைத் கிளிக் செய்யவும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் மற்றொரு 6 இலக்க ஓடிபி வரும். அதை நிரப்பி சமர்ப்பி என்பதைத் கிளிக் செய்யவும்.

செயல்முறை எண். 4: இதற்குப் பிறகு உங்கள் இ-கேஒய்சி முடிக்கப்படும் அல்லது தவறானது என்று காணப்படும். அப்படி காணப்பட்டால், ஆதார் சேவை மையத்திற்குச் சென்று சரி செய்து கொள்ளலாம். இ-கேஒய்சி ஏற்கனவே முடிந்துவிட்டால், இ-கேஒய்சி ஏற்கனவே முடிந்துவிட்டது என்ற செய்தி திரையில் காட்டப்படும்.

ஜூன் 30 வரை சோசியல் அப்டே நடைபெறும்
மே 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சமூக தணிக்கை அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கையில், தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் பற்றிய தகவல்கள் கிராம சபை மூலம் சேகரிக்கப்படும். அதன் பிறகு, பட்டியலில் இருந்து தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும்.

மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News