LPG Subsidy: சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா? மத்திய அரசின் திட்டம் என்ன?

பிபிசிஎல் விற்பனை செயல்முறை முடிந்த பிறகும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் பெறுவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல், திட்டம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காக புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2021, 06:07 PM IST
LPG Subsidy: சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா? மத்திய அரசின் திட்டம் என்ன?  title=

LPG Subsidy News: எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), முதலீடு செய்வதற்கான செயல்முறையின் கீழ், அதன் எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்க ஒரு தனி தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலம், மானியத் தொகை நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மாற்றப்படும்.

அரசாங்கம் கூறியது என்ன?

பிபிசிஎல் விற்பனை செயல்முறை முடிந்த பிறகும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் பெறுவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல், திட்டம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், புதிய தளத்தின் மூலம், BPCL தனியார்மயமாக்கப்பட்ட பிறகும், எல்பிஜி நுகர்வோருக்கு அரசு தொடர்ந்து மானியத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும்.

பிபிசிஎல்-லின் தனியார்மயமாக்கல்

பிபிசிஎல்-லில் அதன் 52.97 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்கவுள்ளது. இதைத் தொடர்ந்து, BPCL தனியார்மயமாக்கப்பட்ட பிறகு மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு (LPG) திட்டம் எவ்வாறு செயல்படும் என்று வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் நிலவியது. நிறுவனங்கள் மானியத்தை வழங்கினால், அதற்கு ஈடாக விலையை திருத்த வேண்டிய நிலை ஏற்படும்.

ALSO READ: 8 மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.165 உயர்வு; முழு விவரம் இங்கே

ஆனால் இப்போது புதிய விதியின் கீழ், எல்பிஜி நுகர்வோருக்கு பிபிசிஎல்-லின் விற்பனைக்கு பிறகும், அவர்களின் வங்கிக் கணக்கில் மானிய பரிமாற்றம் தொடரும். தற்போதைய முறையைப் போலவே, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மானியத்தைப் பெறுவார்கள் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய தளத்தில் என்ன உள்ளது?

ஒரு புதிய தளத்தின் உதவியுடன், மானிய விலையில் அளிக்கப்படும் எல்பிஜி இணைப்புகளின் செயல்பாடுகள் தனியாக 
 நடத்தப்படும். இந்த புதிய தளம் பயனாளிகளை அடையாளம் காணவும், மானியத்தை மாற்றவும் உதவும். ரிலையன்ஸ், நைரா எனர்ஜி போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு, எல்பிஜிக்கு அரசு எந்த மானிய ஆதரவும் வழங்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், இந்த நிறுவனங்கள் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களை விற்றால், இந்த விற்பனை சந்தை விலையிலேயே செய்யப்படும்.

BPCL-க்கான ஏலம்

நடப்பு நிதியாண்டு 2021-22 க்கு பெட்ரோலிய மானியமாக அரசாங்கம் ரூ .12,995 கோடியை ஒதுக்கியுள்ளது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இந்த ஒதுக்கீடு ரூ .40,000 கோடியாக இருந்தது. BPCL ஐப் பொறுத்தவரை, அரசாங்கம் (Central Government) விரைவில் முதலீட்டாளர்களிடமிருந்து ஏலத்தொகையை கோரும். வேதாந்தா குழுவைத் தவிர,  அப்பல்லோ குளோபல் மற்றும் ஐ ஸ்கொயர் கேபிடல் ஆகிய இரண்டு அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்த ஏலத்தில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

ALSO READ: Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News