7th Pay Commission ஜாக்பாட் செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ 46% அதிகரிக்கும்

7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 29, 2023, 10:59 AM IST
  • ஜனவரி-பிப்ரவரிக்குப் பிறகு, இப்போது தொழிலாளர் அமைச்சகம் மார்ச் மாதத்திற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி ஏஐசிபிஐ மதிப்பீட்டு எண் 132.7 லிருந்து 133.3 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்த எண் அதிகரித்துள்ளதால், அகவிலைப்படியும் 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7th Pay Commission ஜாக்பாட் செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ 46% அதிகரிக்கும் title=

மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஜூலை மாதத்தில் அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் மேட்ரிக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி, தற்போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் விகிதம் 42% ஆக உள்ளது. அடுத்த திருத்தத்தில் இது 46% ஆக அதிகரிக்கலாம். மார்ச் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளிலிருந்து இது மதிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் 4 சதவீதம் அதிகரித்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும்.

ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜனவரி-பிப்ரவரிக்குப் பிறகு, இப்போது தொழிலாளர் அமைச்சகம் மார்ச் மாதத்திற்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஐசிபிஐ மதிப்பீட்டு எண் 132.7 லிருந்து 133.3 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த எண் அதிகரித்துள்ளதால், அகவிலைப்படியும் 4 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அதாவது தற்போதைய 42 சதவீதத்திலிருந்து ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். 

எனினும், ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரையிலான புள்ளிவிவரங்கள் இனி வரவுள்ளன. அவை வந்த பிறாகே ஜூலை முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது பற்றிய முழுமையான தெளிவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: இன்று மாலை வரும் நல்ல செய்தி

ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 46% ஆக உயரலாம் 

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். புதிய விகிதங்கள் ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் ரக்ஷாபந்தன் பண்டிகைக்கும் தீபாவளிக்கும் இடையிலான காலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும், எப்போது அறிவிக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் இதன் மூலம் 48 லட்சம் ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்பபடி  (42 x 29200) / 100 என்ற சூத்திரத்தின் மூலம் தீர்மானிக்கப்படும். அதேபோல், ஓய்வூதியர்களுக்கான அகவிலை நிவாரணமும் கணக்கிடப்படுகிறது.

அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் விகிதங்கள் எப்படி தீர்மானிக்கப்படுகின்றன 

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ தரவுகளின்படி, அகவிலைப்படி விகிதம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு மத்திய அரசால் ஜனவரி மாதம் மற்றும் ஜூலை மாதம் என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. 

ஜனவரி 2023க்கான அகவிலைப்படி விகிதங்கள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன. அடுத்த அதிகரிப்பு ஜூலையில் இருக்கும். ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஜூலை மாதத்தில் டிஏ எவ்வளவு அதிகரிக்கும் என்பது ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களின் சிபிஐ-ஐடபிள்யூ புள்ளிவிவரங்கள் வந்த பிறகு முடிவு செய்யப்படும். இது இந்த ஆண்டின் இரண்டாவது உயர்வு ஆகும்.

மற்றொரு நல்ல செய்தி

8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன் ஊழியர்களுக்கு பெரிய பரிசை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும்

தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். இதனுடன், சம்பள கமிஷன் அறிக்கையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | 8th Pay Commission மாஸ் அப்டேட்: விரைவில் எக்கச்சக்க ஊதிய உயர்வு, குஷியில் ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News