7th Pay Commission: அடி தூள்... அடிப்படை சம்பளத்தில் அதிரடி ஏற்றம், ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் இன்னும் சில நாட்களில் மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை பெறக்கூடும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 25, 2023, 02:39 PM IST
  • ஃபிட்மெண்ட் ஃபேக்டரை அதிகரிக்க முடிவு.
  • ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை.
  • ஊழியர்களின் சம்பளம் 18,000 -லிருந்து 21,000 ஆக உயரும்.
7th Pay Commission: அடி தூள்... அடிப்படை சம்பளத்தில் அதிரடி ஏற்றம், ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட் title=

7வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பல பெரிய செய்திகள் காத்திருக்கின்றன. ஒருபுறம் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஊழியர்களின் சம்பளத்தில் மேலும் ஏற்றம் இருக்கும் என கூறப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. எனினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் மிக விரைவில் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -லிருந்து அதிகரித்து ரூ.26,000 ஆக உயரக்கூடும்.

ஃபிட்மெண்ட் ஃபேக்டரை அதிகரிக்க முடிவு

வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மோடி அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றான. இத்துடன் சம்பளத்தை அதிகரிக்க புதிய ஃபார்முலாக்களையும் அரசு தயாரிக்கலாம். தற்போது, ​​பணியாளரின் அகவிலைப்படி 42 சதவீதமாகவும், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 சதவீதமாகவும் உள்ளது. ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை

வரும் தேர்தலுக்கு முன், 7வது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57ல் இருந்து 3 சதவீதம் அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2024ல் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படலாம் என நம்பப்படுகிறது. இந்த அதிகரித்த ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2026 -க்குள் செயல்படுத்தப்படலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! அகவிலைப்படியை உயர்த்தும் அரசு?

மறுபுறம், 2023 இல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்றும் 2024 இல் இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு இதில் அதிகரிப்பு ஏற்படும் என்றும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு, அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இது குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. 

ஊழியர்களின் சம்பளம் 18,000 -லிருந்து 21,000 ஆக உயரும்

தற்போதுள்ள ஃபிட்மென்ட் பேக்டர் 2.57ல் இருந்து 3 ஆக அதிகரித்தால், அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.21,000 ஆக உயரும். ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளம் ரூ.25,760 ஆக உயரும். சுமார் 68 லட்சம் ஊழியர்கள் இதன் பலனைப் பெறுவார்கள்.

ஜூலையில் அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படியில் என்ன திருத்தம் நடந்தாலும், அது 6 மாத சிபிஐ-ஐடபிள்யூ குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றது. இப்போது அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த அதிகரிப்பு ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது, ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை வரும் AICPI-IW இன் புள்ளிவிவரங்கள், ஜூலையில் எவ்வளவு அகவிலைப்படி உயரும் என்பதைத் தீர்மானிக்கும். இதுவரை அகவிலைப்படி குறியீட்டு அடிப்படையில் 43.79ஐ எட்டியுள்ளது. அதாவது பிப்ரவரி வரை 44 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது அடுத்த எண் அதாவது மார்ச் மாதத்தின் எண்ணிக்கை ஏப்ரல் 28 மாலை வரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் வரும் 3 குட் நியூஸ், மகிழ்ச்சியில் ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News