குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் மீது குருவின் பார்வையால் குபேர யோகம் வரும்

Guru Peyarchi 2022: குரு பகவானின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 8, 2022, 06:55 PM IST
  • குருவின் வருகையால் நிதி நிலை மேம்படும்.
  • கடின உழைப்பால் அதிக பணம் சம்பாதிக்கலாம்.
  • வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் மீது குருவின் பார்வையால் குபேர யோகம் வரும் title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக உள்ளது. இந்த மாதத்தில், வியாழன் உட்பட 9 கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும். இது அனைத்து ராசிக்காரர்களிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இராசி மாற்றங்கள் சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். 

ஜோதிட சாஸ்திரப்படி, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவகுரு பிருஹஸ்தபதி தனது சொந்த ராசியான மீனத்தில் பெயர்ச்சியாக உள்ளார். ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 11.23 மணிக்கு தேவகுரு வியாழன் ராசி மாறுகிறார். குரு பகவானின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்
வியாழனின் பெயர்ச்சி மேஷ ராசியின் 12 ஆம் வீட்டில் இருக்கும். இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பயணத்தின் போது ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

ரிஷபம்
வியாழன் ரிஷப ராசியின் வருமான ஸ்தானத்தில் நுழையவுள்ளார். இந்த காலகட்டத்தில் குருவின் வருகையால் நிதி நிலை மேம்படும். மேலும், குரு பகவானின் இந்த மாற்றத்தின்போது திடீர் பண ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகளில் இனிமை இருக்கும். வியாபாரத்தில் கிடைக்காமல் இருந்த தொகை இப்போது கிடைக்கும். 

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

மிதுனம்

குருவின் ராசி பாற்றம் கர்ம மிதுன ராசிக்காரர்களின் கர்ம ஸ்தானத்தில் நடக்கும். ஆகையால் இந்த காலத்தில் நீங்கள் கடின உழைப்பால் அதிக பணம் சம்பாதிக்கலாம். வேலையில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டம் நீதிமன்றம் தொடர்பான பணிகளுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். 

கடகம்
குரு பகவானின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இதன் காரணமாக இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இந்த காலத்தில் பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணிகள் பாராட்டப்படும். ஊதியம் உயரும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இது தவிர, இந்த காலம் வணிகம் செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் எட்டாவது ஸ்தானத்தில் குரு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக இந்த காலத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதனுடன், பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகளும் உருவாக்கப்படும். திருமண வாழ்வில் பரஸ்பர இனிமை நிலைத்திருக்கும். இது தவிர வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய புதன் பெயர்ச்சி உங்களுக்கு சுபமா அசுபமா புதனின் பெயர்ச்சி பலன்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News