உங்களிடம் Airtel சிம் உள்ளதா? இப்படி செய்தால், ரூ.4 லட்சம் மதிப்பிலான நன்மைகள்

 நீங்கள் ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நிறுவனம் உங்களுக்கு ரூ .4 லட்சம் நேரடி பலனை வழங்குகிறது. இதைப்பெற நீங்கள் ரூ.279 மட்டுமே செலவிட வேண்டி இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 7, 2021, 05:32 PM IST
உங்களிடம்  Airtel சிம் உள்ளதா? இப்படி செய்தால், ரூ.4 லட்சம் மதிப்பிலான நன்மைகள் title=

புதுடெல்லி: நீங்கள் ஏர்டெல் சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நிறுவனம் உங்களுக்கு ரூ .4 லட்சம் நேரடி பலனை வழங்குகிறது. இதைப்பெற நீங்கள் ரூ.279 மட்டுமே செலவிட வேண்டி இருக்கும்.

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 279 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் இலவச ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. இது தவிர, இதுபோன்ற பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆயுள் காப்பீடு அல்லது சுகாதார காப்பீட்டை இலவசமாக வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் வழங்கும் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.

ஏர்டெல்லின் இலவச 4 லட்சம் ரூபாய் கால ஆயுள் காப்பீடு

ஏர்டெல் (Airtel) தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களுடன் இலவச கால ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகையின் கீழ் இரண்டு திட்டங்கள் உள்ளன. 279 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் பல சலுகைகளுடன் ரூ .4 லட்சம் மதிப்பிலான கால ஆயுள் காப்பீடு கிடைக்கும். ரூ .179-க்கு ரீசார்ஜ் செய்தால் 2 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

EPFO இல் ரூ .7 லட்சம் காப்பீடு

EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் 'ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்' (EDLI Insurance cover)-இன் கீழ் காப்பீட்டு வசதியையும் பெறுகின்றனர். இத்திட்டத்தில், அதிகபட்சமாக ரூ .7 லட்சம் காப்பீட்டுத் தொகை இபிஎஃப்ஒ-வால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு வழங்கப்படுகிறது.

ALSO READ: இனி இந்த பிளான் ரீசார்ஜ் செய்ய முடியாது; Airtel அதிரடி அறிவிப்பு!

LPG-யில் 50 லட்சம் காப்பீடு

LPG இணைப்பு உள்ள வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் கீழ், எரிவாயு கசிவு அல்லது எல்பிஜி சிலிண்டர் வெடித்ததால் எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் ரூ .50 லட்சம் வரை காப்பீடு நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

ஜன் தன் கணக்கில் காப்பீடு

அரசாங்கத் திட்டமான ஜன் தன் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குடன் கிடைக்கும் ரூபே டெபிட் கார்டில் 30 ஆயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடும், இரண்டு லட்சம் ரூபாய் தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டமும் உள்ளது. அதாவது, ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள், இதன் மூலமும் இரண்டு லட்சம் வரை பலன் பெறலாம்.

PNB இலவச விபத்து காப்பீட்டை வழங்குகிறது

PNB அதாவது பஞ்சாப் நேஷனல் வங்கியின் 'ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டில்' ரூ .2 லட்சம் வரை இலவச விபத்து காப்பீடு கிடைக்கிறது. இதனுடன், இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.

ALSO READ:LIC சிறப்புக் பாலிசி: 2 லட்சம் காப்பீட்டில் 5 லட்சம் வருமானம் பெற சூப்பர் வாய்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News