DA Hike: அடுத்தடுத்து வரும் அகவிலைப்படி உயர்வு... இன்று வெளியாகும் அறிவிப்பு?

7th Pay Commission DA Hike: மத்திய அரசை தொடர்ந்து, ராஜஸ்தான், அசாம் போன்ற மாநில அரசுகளும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்த நிலையில், தற்போது மற்றொரு மாநிலமும் அதே அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 6, 2023, 12:28 AM IST
  • சமீபத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை 4% உயர்த்தியது.
  • இதனால், அகவிலைப்படி விகிதம் 42 ஆக உள்ளது.
DA Hike: அடுத்தடுத்து வரும் அகவிலைப்படி உயர்வு... இன்று வெளியாகும் அறிவிப்பு? title=

7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஊழியர்களின் அகவிலைப்படியை ஒரு சில மாநிலங்கள் உயர்த்தின. அந்த வகையில், ஜார்க்கண்ட் அரசும் தனது அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், எந்தெந்த மாநிலங்கள், அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது இதில் காணலாம்.

ராஜஸ்தான்

மத்திய அரசை அகவிலைப்படியை உயர்த்தியதை தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. 4 சதவீத அகவிலைப்படி உயர்வு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியது. 

அரசின் அறிவிப்பின்படி, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2023 முதல் 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். முன்னதாக, அவர்களுக்கு 38 சதவீத டிஏ வழங்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக, ராஜஸ்தான் அரசின் இந்த முடிவால் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 4.40 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே இந்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார். ஆனால் அது நீண்ட காலத்திற்குப் பிறகு செயல்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் ராஜஸ்தான் அரசு அறிவிப்புடன் உயர்த்தப்பட்ட தொகையை உடனடியாக வழங்குவதை உறுதி செய்கிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம் விரைவில், கணக்கீடு இதோ!!

அசாம் 

கடந்த மாதம், அசாம் அரசு ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து மக்களுக்கு "பிஹு பரிசு" என அறிவித்தது. இதனை அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. 

“எங்களுடையது ஊழியர்களுக்காக அக்கறை கொண்ட அரசாங்கம், மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு இந்தாண்டு ஜனவரி 1, முதல் கூடுதல் 4% அகவிலைப்படியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய அகவிலைப்படி விகிதம் இப்போது 42% ஆக உள்ளது,” என்று சர்மா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

முதலில் மத்திய அரசு

சமீபத்தில், 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக உயர்த்தியது. இதுகுறித்து, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், "அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.12,815.60 கோடி செலவு ஏற்படும்.

ஜார்க்கண்ட் 4% DA உயர்வை அறிவிக்குமா?

இதற்கிடையில், ஜார்க்கண்ட் அரசாங்கம் தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 6ஆம் தேதி, வியாழன் (அதாவது இன்று) அன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது அது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட், நிதி அமைச்சகம் புதிய அப்டேட் வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News