7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, ஊதியம் இரட்டிப்பாகலாம்!!

அரசாங்கம் ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2022, 12:22 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது.
  • மத்திய ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் விரைவில் கிடைக்கக்கூடும்.
  • அரசு ஊழியர்கள் தற்போது 2.57 சதவீத ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படையில் சம்பளம் பெறுகிறார்கள்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, ஊதியம் இரட்டிப்பாகலாம்!! title=

7th Pay Commission update: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. சில மாதங்கள் முன்னர்தான் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டது. பின்னர் வீட்டு வாடகை கொடுப்பனவு, பயணப்படி அதிகரிப்பு கிடைத்த பிறகு, இப்போது ஊழியர்கள் புத்தாண்டில் மீண்டும் ஒரு பரிசைப் பெற உள்ளனர். 

அரசாங்கம் ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதம் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படலாம். ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புடன், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் உயரும்.

அரசு பரிசீலித்து வருகிறது

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் (Government Employees) தங்களது ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பிப்ரவரி 1, 2022 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமும் உயரும்.

ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களின் சம்பளத்தில் அதிரடி உயர்வு

பட்ஜெட் வரைவில் சேர்க்கப்படலாம்

மத்திய ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் விரைவில் கிடைக்கக்கூடும். பட்ஜெட்டுக்கு முன்னர், அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, அது செலவினத்தில் சேர்க்கப்படும். எனினும், இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், இதை 2022 பட்ஜெட் வரைவில் சேர்க்கத் தேவை இருக்காது.

சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்

ஃபிட்மெண்ட் ஃபாக்டர்  (Central Govt Employee Fitment factor) அங்கீகரிக்கப்பட்டால், அதன் பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் (Salary) உயரும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்புடன், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும்.

அரசு ஊழியர்கள் தற்போது 2.57 சதவீத ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படையில் சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, இது 3.68 சதவீதமாக அதிகரிக்கப்படும். 

அப்படி நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் 8,000 ரூபாய் உயரும். அதாவது தற்போது வரை ரூ.18,000 ஆக இருந்த தொகை இப்போது ரூ.26,000 ஆக அதிகரிக்கும்.

ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்க வலியுறுத்தல்

7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளை அமல்படுத்த அரசாங்கம் இசைவுடன் உள்ளது. எனினும், அரசு, குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதற்கு ஆதரவாக இல்லை. அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்கக்கூடும். 

ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் (Basic Salary) ரூ.18,000ல் இருந்து ரூ.21,000 ஆக உயரும். அமைச்சரவை செயலாளருடனான ஊழியர் சங்க கூட்டத்திலும் இது குறித்த நல்ல செய்தி கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டது. அரசாங்கம் இப்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ | 7th Pay Commission: மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் மீண்டும் உயர்வு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News