ஜம்மு காஷ்மீர்: ஹிஸ்புல், லஷ்கர்-இ பயங்கரவாதிகள் 9 கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒருவன் உயிருடன் பிடிப்பட்டான்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 1, 2018, 11:42 AM IST
ஜம்மு காஷ்மீர்: ஹிஸ்புல், லஷ்கர்-இ பயங்கரவாதிகள் 9 கொல்லப்பட்டனர்  title=

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள டிரகாட் மற்றும் கச்டோரா பகுதியில் ஹிஸ்புல் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதேபோல அனந்த்நாக் பகுதியிலும் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் அவர்களை சரணடையும் படி கூறினர். ஆனால் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்றிரவு முதல் நடைபெற்று வரும், இந்த தூப்பாக்கி சண்டையில், காஷ்மீர் போலீஸ் மற்றும் இராணுவத்தின் 44 ராஷ்டிரீ ரைஃபிள்ஸ் (ஆர்ஆர்), 3 ஆர்ஆர், 34 ஆர்ஆர், மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சண்டையில், காக்டோராவில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர், மற்றொரு வீரர் டிராக்டில் காயமடைந்துள்ளார். அவர்கள் அனைவரும் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இரண்டு இடங்களிலும், தீவிரவாதிகள் ஒரு குடியிருப்பு இல்லத்தில் மறைத்து உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் எத்தனை பேர் என்று தெளிவாக தெரியவில்லை. தெற்கே காஷ்மீர் பகுதியில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஃப்ராளல்லா மற்றும் பன்னிஹால் நகரங்களுக்கிடையிலான இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அனந்தநாக் மாவட்டத்தில் டூய்காம் பகுதியில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ரஃப் காண்டே கொல்லப்பட்டான். ஒரு தீவிரவாதி கைதும் செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர்.

 

 

சோபியானில் நடைபெறும் இருவேறு என்கௌன்டர்களில் இதுவரை 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு பயங்கராதி உயிருடன் பிடிக்கப்பட்டு உள்ளான். மேலும் ஆறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

 

Trending News