IPL _2018: மும்பை அணி முதலில் பேட்டிங்!

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலின் தேர்வு செய்துள்ளது. மும்பை அணி முதலில் பேட்டிங்! 

Last Updated : May 6, 2018, 04:08 PM IST
IPL _2018: மும்பை அணி முதலில் பேட்டிங்!  title=

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. ஐ.பி.எல்-ன் 37-வது லீக் ஆட்டம் இன்று மாலை 4 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா அணி இதுவரை தான் விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றியையும் 4 தோல்வியையும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தன் வெற்றியின் எண்ணிக்கையை உயர்த்த விரும்பும் என்பதில் சந்தேகம் இல்லை.  

மும்பை அணி இதுவரை தான் விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்ற மும்பை அணி பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்று தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது. 

இதையடுத்து இராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் மீண்டும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அதம் பின்னர் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மீண்டும் தோல்வியடைந்தது. இந்த தோல்விகளால் மும்பை அணி இனிவரும் போட்டிகளில் வென்றால் தான் இந்த தொடரில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மும்பை அணி, பஞ்சாப் அணியை கடந்த போட்டியில் வென்றது. எனவே இன்றைய போட்டியிலும் மும்பை அணி வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலின் தேர்வு செய்துள்ளது. மும்பை அணி முதலில் பேட்டிங்! 

 

Trending News